என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வங்காளதேசம்
- பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- அவாமி லீக் கட்சிக்காக நிச்சயம் வங்காளதேசம் திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ள அவர், இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்து இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது. இதற்கிடையே இந்தியாவும் அவருக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்குமா? என்பதில் கேள்வி எழுந்தது.
இதனால் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது தாயார் வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பிய பின், சொந்த நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் தெரிவித்துள்ளார்.
சஜீப் வசேத் பிடிஐ-க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
எனது தாயார் ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திரும்புவாரா? அரசியல் செயல்பாட்டுடன் திரும்புவாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் குடும்ப உறுப்பினர்கள் நாட்டு மக்களை கைவிட்டுவிட மாட்டார்கள். அதேபோல் பாதிக்கப்பட்டுள்ள அவாமி லீக் கட்சியையும் கைவிடமாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
தனது தாயைப் பாதுகாத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச கருத்தை உருவாக்கவும் அழுத்தம் கொடுக்கவும் இந்தியா உதவ வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பமாட்டார் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால், நாடு முழுவதும் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இப்போது நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யப் போகிறோம். நாங்கள் அவர்களை அப்படியே விட்டுவிடப்போவதில்லை.
அவாமி லீக் வங்கதேசத்தின் மிகவும் பழமையான கட்சி. ஆகவே, அக்கட்சி தொண்டர்களிடம் இருந்து அப்படியே விலகிச் செல்ல முடியாது. வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பும்போது ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார்.
சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலையீடு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். தாக்குதல்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டவை, துல்லியமாக திட்டமிடப்பட்டவை மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிலைமையைத் தூண்டிவிட வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன செய்தாலும், அவர்கள் நிலைமையை மோசமாக்க முயன்றனர்.
இவ்வாறு சஜீப் வசாத் தெரிவித்துள்ளார்.
- ஜூலை 16-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
- செவ்வாய்க்கிழமை மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வகையில் வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டம் ஜூலை மத்தியில் தொடங்கிய பின்னர் அமைதி நிலை திரும்பியது.
பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இதனால் ஷேக் ஹசீனா தனது பதிவியை ராஜினாமா செய்தார். ராணுவம் இடைக்கால அரசை அமைப்பதாக தெரிவித்தது.
ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார். அதன்பின்பும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹோட்டலுக்கு தீ வைத்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தபின், வங்காளதேசத்தில் நேற்று மாலை வரை குறைந்தது 232 பேர் உயிரழந்தனர். வங்காளதேசத்தில் நடைபெற்ற போராட்டம் காரணமாக மொத்த உயிரிழப்பு 560-ஐ தாண்டியுள்ளது.
ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் 328 பேர் உயிரிழந்திருந்தனர். ஜூலை 16-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக 23 நாள் போராட்ட வன்முறையில் 560 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை (நேற்று) மட்டும் 21-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காசிப்பூரில் உளள் காஷிம்புர் உயர்பாதுகாப்பு சிறையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தடுத்து நிறுத்த ஜெயில் வார்டன்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
- வங்கதேசத்தில் இடைக்கால அரசு நாளை இரவு 8 மணிக்கு பதவியேற்கிறது.
- 84 வயதாகும் முகமது யூனஸ், 2006ம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசை பெற்றார்.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்க உள்ளதாக ராணுவத் தலைமை தளபதி அறிவித்துள்ளார்.
பிரதமர் என்ற பதவி இல்லாமல் தலைமை ஆலோசகர் என்ற பதவியுடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஆட்சி செய்ய உள்ளது
முகமது யூனஸ் தலைமையில் 15 உறுப்பினர்களுடன் வங்கதேசத்தில் இடைக்கால அரசு நாளை இரவு 8 மணிக்கு பதவியேற்கிறது
84 வயதாகும் முகமது யூனஸ், ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மூலம் சாந்தோ கான் நாயகனாக அறிமுகமானார்.
- திரைப்பட தயாரிப்பாளரான செலிம் கான் பல படங்களை தயாரித்துள்ளார்.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வன்முறை வெடித்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் நடிகர் சாந்தோ கான் மற்றும் அவரது தந்தை செலிம் கானை கும்பல் ஒன்று அடித்து கொலை செய்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளரான செலிம் கான் பல படங்களை தயாரித்துள்ளார். ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தையும் செலிம் கான் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் செலின் கான் தனது மகன் சாந்தோ கானை நாயகனாக சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தார்.
சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றச்சாட்டில் செலிம் கான் கைதாகி ஏற்கனவே சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
- 'மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்'
வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்காளதேச சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடத்தப் போராட்டம் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற குரலாக மாறியது.
14 ஆண்டுகால ஆட்சியை இரண்டே மாதங்களில் தூக்கியெறிய வைத்தது எது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.போராட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஜமாத்- இ- இஸ்லாமியின் பங்கு கவனிக்கத்தக்கது. மேலும் ஹசீனாவுடனான இந்தியாவின் நெருக்கம், சீனா உள்ளிட்ட நாடுகளை உறுத்துதலாக இருந்து வருவதையும் பொருத்திப் பார்க்க வேண்டி உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
மே 2024 இல் அவர் அளித்த அந்த பேட்டியில், வங்காள தேசத்தில் தங்களது நாட்டின் விமான படைத்தளத்தை அமைக்க அனுமதி அளித்தால் தன்னை மீண்டும் மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்' என்று ஹசீனா தெரிவித்திருந்தார். ஆனால் எந்த புதிய விமான தளமும் வங்காள தேசத்தில் அமைக்கப்படவில்லை. தற்போது ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஹசீனா வெள்ளை இன நபர் என்று குறிப்பிட்டது, மேற்கு நாடுகளை குறிக்கிறது என்றும் எனவே இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்கு நாடு ஒன்றின் சதி இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. கடந்த 2009 முதல் ஆட்சியில் உள்ள ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்த தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- போட்டித் தன்மையை அதிகளவு பாதிக்காது என வல்லுநர்கள் தெரிவித்தனர்.
- மற்ற நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.
பிரபல எப்எம்சிஜி நிறுவனமான மரிகோ பங்குகள் 4 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன. சஃபோலா மற்றும் பாராஷூட் என முன்னணி பிராண்டுகளின் உரிமையாளராக மரிகோ இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக இந்நிறுவன பங்குகள் சரிவடைந்துள்ளன.
மரிகோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 11 முதல் 12 சதவீதம் வங்காளதேசத்தில் இருந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்காளதேசத்தில் வியாபாரம் செய்து வரும் மரிகோ தற்போது விற்பனையில் மந்த நிலையை சந்திக்கும். ஆனாலும், இது அந்நிறுவன போட்டித் தன்மையை அதிகளவு பாதிக்காது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ஜூன் மாதம் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட மரிகோ, ஒட்டுமொத்த சர்வதேச வியாபாரத்தில் வங்காளதேச விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதாக தெரிவித்தது. மரிகோவின் சர்வதேச வியாபாரத்தில் வங்காளதேசத்தின் பங்குகள் 44 சதவீதம் வரை சரிந்துள்ளது.
"2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்காளதேச நிலைமை கவலையில் ஆழ்த்துகிறது. மற்ற எப்எம்சிஜி நிறுவனங்கள் வங்காளத போராட்டங்களால் இரண்டாம் காலாண்டு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன. வங்காளதேசத்தில் அதிகளவு எப்எம்சிஜி பொருட்களை விற்கும் நிறுவனமாக மரிகோ விளங்குகிறது. மற்ற நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன," என்று முதலீட்டு நிறுவனமான நுவாமாவின் அப்னீஷ் ராய் தெரிவித்தார்.
மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதால் வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது அந்நாட்டில் அமைய உள்ள இடைக்கால அரசாங்கத்தை முகமது யூனஸ் நடத்த இருக்கிறார்.
- ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
- ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர்.
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து, ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர். மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை ருசி பார்த்தனர். அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த போட்டோக்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.
பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர்.
ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் உடைக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையின் தலை மீது ஏறி போராட்டக்காரர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு இறுதியில் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
- போராட்டக்காரர்கள் அரசு சொத்துகளை தீவைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.
- அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரின் சர்வதேச ஹோட்டலை தீ வைத்து எரித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தை ஷேக் ஹசீனா பக்கம் திருப்பினர்.
போராட்டம் வன்முறை ஆக வெடித்து கட்டுக்கடங்காத வகையில் சென்ற நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ளார்.
இடைக்கால அரசு அமைப்பதாக வங்காளதேசம் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடி வருகின்றனர். பல இடங்களில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு தீவைத்துள்ளனர்.
அந்த வகையில் ஜோஷோர் மாவட்டத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவருக்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீவைத்து கொளுத்தினர். இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்குள் இருந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. சபீர் சர்வதேச ஹோட்டல் அவாமி லீக் கட்சியின் பொது செயலாளர் ஷஹின் சக்லாதாருக்கு சொந்தமானதாகும்.
போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சூறையாடுவதுடன், தீ வைத்து சேதப்படுத்தியும் வருகிறார்கள்.
- வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டார்.
- ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
டாக்கா:
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், வங்காளதேச பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.
மேலும், ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அதிபர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
- பேராசிரியரான முகமது யூனுஸ் 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
- முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக நோபர் பரிசு வென்ற முகமது யூனுஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) 2006ல் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக அவருக்கு இந்தாண்டு தொடக்கத்தில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது.
- தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டு இருந்தார். எனினும், இதற்கான நடவடிக்கைகள் எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இதனிடையே, கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் 518 கைதிகள் தப்பியுள்ளனர். தப்பியோடிய கைதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறைச்சாலை இந்தியா-வங்காளதேச எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லை பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்லைப் பாதுகாப்புப் படையானது (பிஎஸ்எஃப்) எல்லையில் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் பாதுகாப்புப் பணியை அதிகரித்துள்ளது. தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
- இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல்.
- சீனா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாக தகவல்.
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறை, ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்டவற்றின் பின்னணியில் சீனா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத் துறை ஆகியவை வங்காளதேசத்தில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளது என்றும், இந்தியாவுக்கு ஆதரவாக உள்ள ஷேக் ஹசீனாவுக்கு பதில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்காள தேசத்தின் தேசியவாத கட்சியை (பி.என்.பி.) ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.என்.பி. கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்