search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு: சீன அதிபர் பங்கேற்கிறார்
    X

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு: சீன அதிபர் பங்கேற்கிறார்

    • கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.
    • இதில் சீனா, ரஷியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    பீஜிங்:

    கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார். ஜூலை 2 முதல் 6-ம் தேதி வரை கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுக்கான அரசுமுறை பயணங்களை மேற்கொள்கிறார் எனவெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அறிவித்தார்.

    இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×