search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸை  மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம் - வீடியோ
    X

    விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம் - வீடியோ

    • நேற்று இரவு 10.47 மணிக்கு புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது
    • தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும்

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அவர்களை மீட்பதற்கான விண்கலம் நேற்று [செப்டம்பர் 28] இரவு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 120 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலம் க்ரூ-9 இல் இடம்பெற்ற 4 வீரர்களுடன் நேற்று இரவு 10.47 மணிக்கு புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும்.

    Next Story
    ×