search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வீடியோ கேமில் மூழ்கிய தந்தை.. 3 மணி நேரமாக வெப்பத்தில் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வீடியோ கேமில் மூழ்கிய தந்தை.. 3 மணி நேரமாக வெப்பத்தில் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை

    • வெளியில் சென்ற தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது.
    • குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருக்கிறார்

    நவீனமயமான உலகத்தில் பெற்றோரின் கவனமின்மையால் குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தாய் மற்றும் தந்தை ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களின் மீது கொண்ட மோகத்தால் குழந்தைகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சரியான கவனம் கிடைக்காமல் வளர்கின்றன.

    இதற்கு ஒரு படி மேலாக தந்தையின் வீடியோ கேம் அடிமைத்தனத்தால் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில், வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது.

    குழந்தைக்கு சி.பி.ஆர் உள்ளிட்ட முதலுதவிகளைச் செய்து பார்த்தும் பயனில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையின்படி , குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

    அதன்பின்னரே விசாரணையில், குழந்தையின் தந்தை, வீட்டின் முன் ஹோண்டா SUV காரை பார்க் செய்து அதில் குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருக்கிறார் என்றும் வாகனத்துக்குள் ஏசி ஓடாத நிலையில் சுமார் 3 மணி நேரமாக வெப்பத்தில் துடிதுடித்து குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொலை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவின் கீழ் தந்தை கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×