search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுத்தே ஆகனும்.. பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் பினிஷிங் டச்
    X

    ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுத்தே ஆகனும்.. பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் பினிஷிங் டச்

    • இன்றைய தினம் நடக்கும் மாநாட்டுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றியுள்ளார்.
    • பிரச்சனைகளை தீர்வதற்கு பதிலாக இன்னும் அதிக சிக்கல் கொண்டவையாக மாறி வருகிறது.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. மேற்கு நாடுகளின் ஜி7 கூட்டமைப்புக்குப் பதிலாக மேற்கூறிய நாடுகளின் பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இந்த பிரிக்ஸ் அமைப்பு.

    அதன்படி 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று [அக்டோபர் 24] உடன் முடிவடைகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் பெசஸ்கியான், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. இந்நிலையில் இன்றைய தினம் நடக்கும் மாநாட்டுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றியுள்ளார்.

    அப்போது பேசிய அவர், மாற்றத்திற்கான செயல்பாடுகள் மூலம் நாம் எவ்வளவுதான் முன்னேறி வந்தாலும் சில நெடுங்கால பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாத முரண்பாடான நிலை உள்ளது. அந்த பிரச்சனைகளை தீர்வதற்கு பதிலாக இன்னும் அதிக சிக்கல் கொண்டவையாக மாறி வருகிறது.

    எனவே உலக நலனுக்காக நிறுவப்பட்ட அமைப்புகளிலும் அதன் செயல்பாடுகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது. இது குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள் சீரமைக்கப்பட வேண்டும். சர்வதேச பிரச்சனைகளில் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாடுகள் மதிக்கப்பட வேண்டும்.

    பலதர்ப்பு வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட சர்வதேச வங்கிகளின் செயல்முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். ஐநாவின் காலாவதியான சூழலைப் போல அவையும் பழையதாகிவிட்டன என்று தெரிவித்தார். மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

    உலக வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை இதற்கு ஆதரவு தெரிவித்தன. என்று சுட்டிக்காட்டினார். முன்னதாக ஐநா கிழக்கிந்திய கம்பெனியைப் போல செயல்படாத ஒன்றாக மாறிவிட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×