search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அதானி நிறுவனத்துக்கு குத்தகைவிட எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்
    X

    அதானி நிறுவனத்துக்கு குத்தகைவிட எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்

    • ஜோமோ கென்யாட்டா விமானநிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது.
    • இந்த விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் முடிவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

    நைரோபி:

    கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது.

    இந்த விமான நிலையத்தை அடுத்த 30 ஆண்டுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

    இந்த ஒப்பந்தத்தின்கீழ் விமான நிலையத்தின் 2-வது ரன்வே மற்றும் புதிய பயணிகள் முனையத்தை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப் புதுப்பிக்கவும் அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த ஒப்பந்தத்திற்கு கென்யாவில் உள்ள விமான நிலைய பணியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இந்த ஒப்பந்தத்திற்கு கென்ய ஜனாதிபதி வில்லியம் ருட்டோ ஆதரவு தெரிவித்தார்.

    இந்நிலையில், அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோமோ கென்யாட்டா விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நைரோபியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பயணிகள் நீண்ட நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

    Next Story
    ×