search icon
என் மலர்tooltip icon

    கென்யா

    • 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழந்து உயிரிழந்தார்
    • ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்து நாடு திரும்பிய ரெபேக்கா கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்தார்.

    வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது முன்னாள் காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் இருந்த நிலத்தகராறு காரணமாக வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

    இந்நிலையில் வீராங்கனை ரெபேக்காவின் உடல் நேற்றைய தினம் கென்யாவில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கென்ய நாட்டின் எல்லையில் உள்ள நகரத்தில் நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் உகாண்டாவை சேர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ரேபாகாவின் காதலிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.

    • ஜோமோ கென்யாட்டா விமானநிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது.
    • இந்த விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் முடிவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

    நைரோபி:

    கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது.

    இந்த விமான நிலையத்தை அடுத்த 30 ஆண்டுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

    இந்த ஒப்பந்தத்தின்கீழ் விமான நிலையத்தின் 2-வது ரன்வே மற்றும் புதிய பயணிகள் முனையத்தை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப் புதுப்பிக்கவும் அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த ஒப்பந்தத்திற்கு கென்யாவில் உள்ள விமான நிலைய பணியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இந்த ஒப்பந்தத்திற்கு கென்ய ஜனாதிபதி வில்லியம் ருட்டோ ஆதரவு தெரிவித்தார்.

    இந்நிலையில், அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோமோ கென்யாட்டா விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நைரோபியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பயணிகள் நீண்ட நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

    • மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நைரோபி:

    கென்யா நாட்டில் உள்ள நெய்ரி மாகாணத்தில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர் விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.

    கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

    இந்த குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்ததில், 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.

    தனது மனைவியின் கொலை தொடங்கி அடுத்ததாக 42 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஒப்பு கொண்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    உலகளவில் பேசு பொருளாக மாறி இருக்கும் கென்யா நாடாளுமன்ற போராட்டத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஔமா ஒபாமா (Auma Obama) கலந்து கொண்டுள்ளார்.

    போராட்டம் தொடர்பாக பேசிய அவர், இங்கு என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள், இதனால் தான் இங்கு வந்துள்ளேன். இளம் கென்யர்கள் தங்களது உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். என்னால் இப்போது கூட கண் திறந்து பார்க்க முடியவில்லை. எங்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது என்று தெரிவித்தார்.

    கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். 

    • கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது இருவர் உயிரிழப்பு.
    • இன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து ஒரு பகுதிக்கு தீவைத்தனர்.

    கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையிலான நிதி மசோதாவை தாக்கல் செய்யப்படுவதற்கு எதிராக போராட்டம் வெடித்தது.

    கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வந்து நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

    திடீரென ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் கோபம் அடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு தீவைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்திற்குள் இருந்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது இருவர் உயிரிழந்தனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில உயிரிழப்பு நடைபெற்றது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    • மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
    • 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

    சமூக வலைதளங்களில் வன விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களை ரசிக்க செய்யும். அந்த வகையில் யூ-டியூபில் 'லேட்டஸ்ட் சைட்டிங்ஸ்' என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சிங்கங்கள் நீச்சல் அடித்து ஆற்றை கடந்த காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.

    அந்த வீடியோ கென்யாவில் உள்ள மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வன பகுதிக்குள் ஒரு ஆறு கடந்து செல்கிறது. வனப்பகுதியில் 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

    அப்போது ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்வதற்காக சிங்கங்கள் வரிசையாக வருகின்றன. பின்னர் ஆற்றில் குதித்து சிங்கங்கள் நீச்சல் அடித்தவாறு மற்றொரு கரையை கடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

    • வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது.
    • வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

    நைரோபி:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

    மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. எனவே லட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.

    இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது. இதனால் அந்த அணையின் தடுப்புச்சுவர் இடிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்றது.

    எனினும் கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். எனினும் இந்த கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    • கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிரேட் ரிஃப்l; பள்ளத்தாக்கு மாகாணத்தில் அமைந்தள்ள பகுதி மாய் மஹியு. இங்கு ஒல்டு கிஜாப் என்ற அணை உள்ளது. இந்த அணி திடீரென்று உடைந்தது வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மரங்களை வேறோடு சாய்த்து இழுத்துச் சென்றது. கார்கள் அடித்து செல்லப்பட்டன.

    அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் மத்தியில் இருந்து கென்யாவில் கனமழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது, கனமழை காரணமாக அணை நிரம்பியிருந்தது.

    கடந்த சனிக்கிழமை கென்யாவின் முக்கியமான விமான நிலையம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. ரன்வே மூழ்கியதால் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிய முகாம் அமைக்க கென்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

    கிழக்க ஆப்பிரிக்க நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. தான்சானியாவில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 155 பேர் உயிரிழந்தனர். புருண்டியில் 2 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • 3 முன்னணி மராத்தான் பந்தயங்களில் பட்டம் வென்றவர் கிப்டம்
    • சிகாகோ மராத்தானில் 02:00:35 மணிக்குள் ஓடி சாதனை படைத்தார் கிப்டம்

    "லாங் டிஸ்டன்ஸ் ரன்னிங்" எனப்படும் நீண்ட தூர ஓட்ட பந்தயங்கள் (3 கிலோமீட்டர்) மற்றும் மராத்தான் (42 கிலோமீட்டர்) பந்தயங்களில் உலகின் முன்னணி வீரர், கென்யாவை சேர்ந்த கெல்வின் கிப்டம் செருயோ (Kelvin Kiptum Cheruiyot).

    உலகின் முன்னணியான 3 மராத்தான் பந்தயங்களில் முதலிடம் பிடித்தவர் கிப்டம்.

    கடந்த 2023 அக்டோபர் மாதம், உலக ஓட்ட பந்தய வரலாற்றிலேயே 02 மணி நேரம் 01 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சிகாகோ மராத்தான் போட்டியை வென்று சாதனை புரிந்தார் கிப்டம்.

    நேற்று இரவு, மேற்கு கென்யாவின் எல்டொரெட் பகுதியில் தனது டொயோட்டா ப்ரீமியோ காரில், பயிற்சியாளர் கெர்வய்ஸ் ஹகிசிமானா (Gervais Hakizimana) மற்றும் வேறொரு நபருடன் கிப்டம் பயணித்தார்.

    காரை கிப்டம் ஓட்டினார்.

    ரிஃப்ட் வேலி எனும் டவுனுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து தாறுமாறாக ஓடி, 200 அடி தொலைவில் இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கி, ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வய்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

    உடன் பயணித்த மற்றொரு பயணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இளம் வயதிலேயே பல உலக சாதனைகளை புரிந்து, மேலும் பல உச்சங்களை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிப்டம், 24 வயதில் உயிரிழந்ததற்கு உலக அளவில் தட-கள (track and field) பந்தயங்களை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • தொழில்துறை முதலீடுகள் குறித்த கருத்தரங்குகளில் வில்லியம் கலந்து கொள்ள உள்ளார்
    • மோடியின் முயற்சிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என வில்லியம் கூறினார்

    தென் ஆப்பிரிக்காவின் இந்திய பெருங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள நாடு, கென்யா. இதன் தலைநகரம் நைரோபி.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், கென்யா அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ (William Samoei Ruto) இந்தியாவிற்கு டிசம்பர் 4லிருந்து 6 வரை 3-நாள் அரசியல் சுற்று பயணமாக வருகை தர உள்ளார். அதிபருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் உடன் வருகை தர உள்ளது.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அதிபர் வில்லியம் மேற்கொள்ளும் முதல் இந்திய சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் 5 அன்று அதிபர் வில்லியமிற்கு ராஷ்டிரபதி பவனில் அரசுமுறை உபசரிப்பும், விருந்தும் வழங்கப்பட உள்ளது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், வில்லியம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இந்திய தொழில்துறையில் முதலீடு செய்வது குறித்து புது டெல்லியில் நடைபெற உள்ள கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வில்லியமின் வருகை, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    வில்லியம், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வருகை தரும் கென்ய அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தனது வருகை குறித்து கென்ய அதிபர் வில்லியம், "இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் இடையே சிறப்பான இருதரப்பு உறவு நிலவி வருகிறது. ஜி20 கூட்டமைப்பில் 55 உறுப்பினர் நாடுகளை கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • பெண்கள் அனைவரும் மாசாய் என்ற சமூகத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் சம்பூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவர்.
    • கிராமம் உருவானதன் பின்னணியில் அதிர்ச்சியான தகவல் உள்ளது.

    பெரிய நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் பெண்களும், ஆண்களும் ஓரளவுக்கு சமவிகிதத்தில் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் மட்டுமே வாழ்கின்ற அதிசய கிராமம் ஒன்று உள்ளது.

    ஆம்! இந்த அதிசய கிராமம் கென்யா நாட்டின் தலைநகரமான நைரோபியில் இருந்து சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த கிராமத்தின் பெயர் உமோஜா. இந்த கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆண்கள் நுழைவதற்கு தடை உள்ளது.

    இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் மாசாய் என்ற சமூகத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் சம்பூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவர். இந்த கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி உள்ளது. இந்த கிராமம் உருவானதன் பின்னணியில் அதிர்ச்சியான தகவல் உள்ளது.

    அதாவது, 1990-களில் பிரிட்டன் ராணுவ வீரர்கள் சம்பூர் இனத்தை சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதன் காரணமாக அந்த பெண்களின் கணவன்மார்கள் அவர்களை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆவேசமடைந்த ரெபேக்கா லோலோ சோலி என்ற பெண் 15 பெண்களுடன் சேர்ந்து இந்த கிராமத்தை நிறுவி உள்ளார்.

    தற்போது 40 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாரம்பரியமான மணி மாலைகளை விற்று வருமானம் ஈட்டுகின்றனர்.

    ×