search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வடக்கு மியான்மரில் வெள்ள அபாயம்: 2 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்
    X

    வடக்கு மியான்மரில் வெள்ள அபாயம்: 2 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்

    • மியான்மரின் வடக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • 30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

    மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஐராவதி ஆறு ஒடுகிறது. கனமழையால் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் உயிரிழந்தோர் விவரம் தெரியவில்லை. ஆனால் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது கச்சின் மாநில அரசு தெரிவித்துள்ளது.

    30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. மியீச்சினா மற்றும் வைமாவ் நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

    மியீச்சினாவில் ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி 5 அடிக்கு மேல் செல்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மேலும் இரண்டு அடி உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×