search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை அதிபருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
    X

    இலங்கை அதிபருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார்.
    • இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்.

    கொழும்பு:

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.

    அஜித் தோவல் இன்று காலை கொழும்பு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை அஜித் தோவல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து உரையாடியதாக தெரிகிறது.

    இலங்கையில் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அஜித் தோவலின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சகல ரத்நாயக ஆகியோரையும் சந்தித்தார்.

    இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு தற்போது விரிவிடைந்துள்ளது. இதில் மொரிசியஸ் மற்றும் வங்கதேசம் ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. சீஷெல்ஸ் பார்வையாளராக இணைந்துள்ளது.

    Next Story
    ×