search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    அடிமைகளின் பாதாள சிறை குறித்து விவரிக்கும் வீடியோ வைரல்
    X

    அடிமைகளின் பாதாள சிறை குறித்து விவரிக்கும் வீடியோ வைரல்

    • இந்த இடம் மிகவும் சிறியது. மிகவும் வேதனையும் துன்பமும் நிறைந்தது.
    • வீடியோ சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு உள்ளது.

    கொத்தடிமை முறை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மன்னராட்சி காலத்தில், பெரும் பணக்காரர்களும், மன்னர்களும் கருப்பினத்தவர்களை விலைக்கு வாங்கி, தங்கள் வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

    அப்படி அடிமைகள் அடைக்கப்பட்ட பாதாள சிறை பற்றிய ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் தள்ளி உள்ளது. கட்டிட கலைஞரான ரஸ்ஸல் என்பவர், பழமையான அந்த கட்டிடத்தின் பாதாள பகுதியை படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அது தான்சானியா நாட்டின், சான்சிபார் நகரில் உள்ளதாம்.

    வீடியோவில் பேசும் ரஸ்ஸல், "இந்த இடம் மிகவும் சிறியது. மிகவும் வேதனையும் துன்பமும் நிறைந்தது. இது 1800-களில் சான்சிபாரில் உள்ள ஸ்டோன்டவுனில் ஓமானி அரேபியர்களால் சிறையில் அடைக்கப்பட்ட அடிமைகளின் வாழ்விடம். மலம் கழிக்கவும், தூங்கவும் ஒரே இடம். தண்ணீரும் அசுத்தமாக இருக்கும், வெளிச்சம் வராது, நோய் தொற்றும் அபாயம் அதிகம். சிறிய இடத்தில் 70 பேர் வரை அடைக்கப்பட்டு இருப்பார்கள். அனைத்து கொடுமைகளிலும் உயிர் பிழைத்தவர்கள் மற்றவர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள்" என்று பேசுகிறார்.

    வீடியோ சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×