search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் உள்பட 5 நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக தேர்வு
    X

    பாகிஸ்தான் உள்பட 5 நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக தேர்வு

    • சோமாலியா 179 வாக்குகள் பெற்றது. டென்மார்க் 184 வாக்குகளும், கிரீஸ் 182 வாக்குகளும் பெற்றன.
    • பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்றது. பாகிஸ்தான் 8-வது முறையாக உறுப்பினராக உள்ளது.

    பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ் மற்றும் பனமா ஆகிய நாடுகள் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் இரண்டு வருட உறுப்பினர் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து தொடங்கும்.

    ஐ.நா, பொது சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்த ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2025 ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 2026 டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த நாடுகளில் உறுப்பினர் பதவிக்காலமாகும்.

    ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய-பிசிபிக் ஆகிய இரண்டு கண்டங்களுக்கான இடத்தில் சோமாலியா 179 வாக்குகள் பெற்றது. பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்றுள்ளது.

    லத்தீன் அமெரிக்கா, கரிபீயன் மாநிலங்களுக்கான இடத்தில் பனமா 183 வாக்குகளை பெற்றது. மேற்கு ஐரோப்பா மற்றும் மற்ற மாநிலங்களுக்கான இடங்களில் டென்மார்க் 184 வாக்குகளும், கிரீஸ் 182 வாக்குகளும் பெற்றன.

    பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்று ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராவது பெருமைக்குரிய தருணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதச சமூகத்தின் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் 8-வது முறையான நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×