search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஆறு நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை
    X

    பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஆறு நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை

    • முகரத்தின்போது வெறுப்பு பேச்சு, வன்முறையை கட்டுப்படுத்த பஞ்சாப் மாகாண அரசு முடிவு.
    • மரியம் ஷெபாஸின் கேபினட் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிந்துரை.

    பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸதானில் தடைவிதிக்கப்படுகிறது.

    முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 18-ந்தேதி வரை (முகரம் மாதம் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை) பஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான கேபினட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

    வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமியிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டள்ளார். அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் என அழைத்த அவர், அதை எதிர்த்து போராடுவது அவசம் என வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. ஏப்ரல் 2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து ராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள்.

    Next Story
    ×