search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சாண்டோரினி தீவில் நிலநடுக்கம்- அவசர நிலை பிரகடனம்
    X

    சாண்டோரினி தீவில் நிலநடுக்கம்- அவசர நிலை பிரகடனம்

    • நிலநடுக்கத்தால் இதுவரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.
    • சாண்டோரினி தீவிலிருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி விட்டனர்.

    ஐரோப்பாவின் தென்கிழக்கே உள்ள கிரீஸ் நாட்டின் சாண்டோரினி தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் இதுவரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.

    கடந்த ஒரு வாரத்திற்குள் 7,700 நிலநடுக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், புதன்கிழமை இரவு பதிவான நிலநடுக்கமே சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது.



    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டது. இந்த அவசர நிலையானது மார்ச் 3-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சாண்டோரினி தீவிலிருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி விட்டனர். சுமார் 7ஆயிரம் பேர் படகு மூலமாகவும், 4ஆயிரம் பேர் விமானம் மூலமாகவும் புறப்பட்டனர்.

    Next Story
    ×