என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை"
- மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இயக்கப்படுகிறது.
- விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட ஏர்பஸ் விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்டவைகளுக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன.
அதேபோல் உள்நாட்டு விமான சேவைகளாக டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை இண்டிகோ நிறுவனம் அளித்து வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் சேவைகள் ஏ.டி.ஆர். விமானங்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 6 சேவைகளாக திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 7.35, 10.35, மதியம் 12.40, 2.55, இரவு 7.45, 10.15 உள்ளிட்ட நேரங்களில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில் காலை 10.35 மற்றும் மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் இரண்டு சேவைகளை மட்டும் நாளை (16-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் விமானங்களை கொண்டு இயக்க உள்ளது.
மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இயக்கப்படுகிறது. இந்த சேவையானது விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட ஏர்பஸ் விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைகள் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் சேகர்.
- கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் அவர் தெரிவித்தார்.
சென்னையின் 'பறவை மனிதர்' என்று அறியப்படும் ஜோசப் சேகர் (73) புற்றுநோய் பாதிப்பால் நேற்று இரவு காலமானார்.
தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்தவர் ஜோசஃப் சேகர்.
ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர், தனது அலுவலக மாடியில் தங்கியிருந்தபோது சில கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த சேவையைத் தொடங்கினார்.
காலப்போக்கில், கடந்த 20 ஆண்டுகளாக தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகள் அவரது இல்லத்துக்கு வந்து உணவு உண்டன.
ஆரம்ப காலத்தில் 'கேமரா ஹவுஸ் சேகர்' என்று அழைக்கப்பட்ட அவர் அவரின் அசாதாரண சேவையால் பின்நாட்களில் 'பறவை மனிதர்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

வாடகை வீட்டில் வசித்து வந்ததால் உரிமையாளர் ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்ய சொல்லவே கிளிகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால் தன் கேமரா சேமிப்புகளை மொத்தமாக விற்பனை செய்து அதனால் வரும் பணத்தில் கட்டடத்தை வாங்கலாம் என்கிற சேகர் நினைத்தார். ஆனால், அது கைகூடவில்லை.

வீட்டை காலி செய்தபின் கடந்த 2 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளிக்க முடியாத வருத்ததையும் அவர் பதிவு செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இப்பிரச்னையால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டதாகக் அவர் தெரிவித்தார். இந்த சூழலில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது
- இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், காசிமா இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் வென்றார்.
அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது.
- இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
7 ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
கேரம் உலக கோப்பை தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்
- சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை.
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் நடவடிக்கையால் வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, இதுவரை போதைப்பொருள் வழக்குகளில் 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 04) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு தெற்கே கரையை கடந்தது.
இதனால் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இதனையடுத்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
- முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான விடுமுறை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை ஆறிக்கை குறித்து வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியில் உள்ள சுழற்சியால் நமக்கு மழை கிடைக்க அதிக வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 29ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
டிசம்பர் மாதத்தில் எந்த அளவுக்கு மழை இருக்கும் என நவம்பர் 30-ல் அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது.
- தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை, கே.கே.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
- Electors Help Desk செயல்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் 18.11.2025 முதல் 25.11.2025 வரை வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் உதவி மையங்கள் (Electors Help Desk) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.குமரகுருபரன் இதை அறிவித்துள்ளார்.
கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் எனவும் சம்மந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக இந்திய அணி கைப்பற்றியது.
- ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றி வராலாறு படைத்தது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாரட்டுக்கள் குவிந்தன. இந்திய அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு அந்த அந்த மாநில அரசுகள் பரிசுத்தொகை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவர் பிரபல கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று இன்று சென்னைக்கு வந்துள்ளார்.
அவருக்கு மேலதாளங்கள் முழுங்க பிரம்மாண்ட வரவேற்று வழங்கப்பட்டது. மேலும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை நடனமாடியும் வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை, சென்னை மாநகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில்வே போலீசார், ஆர்.பி.எப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.






