என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலச்சரிவு"

    • இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
    • சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.

    முன்பு வெறும் முன்னெச்சரிக்கையாக இருந்து வந்த கலாநிலை மாற்றம் என்ற சொல் அஞ்சியபடி தற்காலத்தில் நிதர்சனமான ஒன்றாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளை உலகம் அனுபவித்து வருகிறது.

    அந்த வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உலகம் இதுவரை கண்டிராத வகையில் சந்தித்தது.

    உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தையே முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர். அதன்படி காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கத்தால் இந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.

    மியான்மர் - நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள்

    மார்ச் 2025-இல் மியான்மரின் மண்டலே பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நிலச்சரிவுகளைத் ஏற்படுத்தியது.

    இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

    தொடர்ந்து ஜூலை மாதத்தில் பெய்த பருவமழையினால் கச்சின்மாநிலத்தின் ஜேட் சுரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

    ஆப்கானிஸ்தான் பேரழிவுகள்

    ஆப்கானிஸ்தானில் 2025-ஆம் ஆண்டு இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆகஸ்ட் 31-இல் ஜலாலாபாத் அருகே ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் மலைப்பகுதிகளில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல கிராமங்கள் சிதைந்தன. இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    நவம்பர் மாதத்தில் பல்க் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பனிப்பொழிவு, சாலைகள் துண்டிப்பு காரணமாக அந்த மக்களுக்கு உதவி கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் நீடித்தன.

    ஐரோப்பாவை வாட்டியெடுத்த வெப்ப அலை

    ஏப்ரல் மாதம் முதலே ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் வெப்பம் தகித்தது. ஜூன், ஜூலை மாதங்களில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.

    இந்த அதீத வெப்பத்தால் அல்பேனியா, போஸ்னியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த வெப்ப அலைக்கு 16,500 பேர் பலியாகினர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

    கலிபோர்னியா காட்டுத்தீ

    இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 14 இடங்களில் காட்டுத்தீ பரவியது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.

    டெக்சாஸ் திடீர் வெள்ளம்

    ஜூலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 135 பேர் உயிரிழந்தனர். சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன.

    இந்தியா - பாகிஸ்தான் வெப்ப அலை

    இந்தியாவில் ஏப்ரல் மாதத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்ற வெயில் வாட்டியது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்தியாவில் மட்டும் இரண்டு மாதங்களில் 455 பேர் வெப்ப பாதிப்புகளால் உயிரிழந்தனர்.

    சூடான் நிலச்சரிவு

    ஏற்கனவே உள்நாட்டு போரால் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருந்த வேலையில், சூடானின் தாராசின் கிராமத்தை ஆகஸ்ட் 31 ஏற்பட்ட நிலச்சரிவு மொத்தமாக விழுங்கியது.

    இரண்டு கட்டங்களாக நிகழ்ந்த இந்த நிலச்சரிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்களும் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தான் பெருவெள்ளம்

    2025 ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை, பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களை உருக்குலைத்தது. 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்தனர்.

    நேபாளம் நிலச்சரிவுகள்

    அக்டோபர் மாதம் நேபாளத்தின் இலாம் (Ilam) மாவட்டத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சுமார் 60 பேர் பலியாகினர்.

    மேலும், ரசுவாகாதி பகுதியில் பனி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டின் உள்கட்டமைப்பைச் சீர்குலைத்தது.

    தென்கிழக்கு ஆசியாயை தாக்கிய சென்யார் புயல்

    2025-ஆம் ஆண்டின் இறுதியில் நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை உலுக்கிய சென்யார் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு சுமத்ராவின் சிபோல்கா மற்றும் மேற்கு சுமத்ராவின் அகாம் பகுதிகளில் கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. சுமார் 12 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இலங்கையை உலுக்கிய டிட்வா புயல்

    இந்தியப் பெருங்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை மற்றும் தென்னிந்தியாவைத் தாக்கியது. இலங்கையில் இது மிகப்பெரிய நிலச்சரிவுகளையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. 600-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தமிழகம் டிட்வா புயலில் இருந்து நூலிழையில் தப்பியது.

    இந்த அனைத்து நிகழ்வுகளையும் இணைக்கும் ஒரே புள்ளி, ஒரே காரணி புவி வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றம் ஆகும். பனிப்பாறைகள் உருகுவதும், கடல் மட்டம் உயர்வதும், பருவநிலை மாறுபடுவதும் கணிக்கமுடியாத வெள்ளம், நிலச்சரிவுகளை ஏற்படுத்தி மனிதகுலத்தின் இருப்பிற்கே சவாலாக மாறியுள்ளன.

    இனியேனும் உலகம் விழித்துக்கொள்ளுமா அல்லது தீவிர வலதுசாரியான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் கூறுவது போல் "காலநிலை மாற்றம் என்பது ஏமாற்று வேலை" என்று தான் ஒரு பொய்யான மாயையில் வாழ்ந்து கொண்டிருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    • கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.

    2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பல மாநிலங்களில் கடுமையான மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன. 

    குறிப்பாக, இந்த ஆண்டில் பலத்த மழையால் வட இந்தியப் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

    வடமேற்குப் பிராந்தியம், குறிப்பாக இமயமலைப் பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 27% அதிக மழை பெய்தது. இது பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குக் காரணமாக அமைந்தது.

    இமாச்சலப் பிரதேசம்:

    *மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசமும் ஒன்றாகும்.

    *வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

    *செப்டம்பர் 2025 நிலவரப்படி, 355-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    *1,200 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

    *45 மேக வெடிப்புகள் (Cloudbursts) மற்றும் 132 பெரிய நிலச்சரிவுகள் இங்கு பதிவாகின.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்:

    *பலத்த மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    *கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    *கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.

    *லடாக் பிராந்தியத்தில் வழக்கத்தைவிட 342% அதிக மழை பதிவானது.

    உத்தரகாண்ட்:

    *உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    *பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன, சாலைகள் சேதமடைந்தன.

    *இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இயற்கைப் பேரழிவுகளால் 85 பேர் உயிரிழந்தனர். 

    பஞ்சாப்:

    *அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், கனமழை காரணமாகவும் மாநிலத்தின் 1,400 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

    பிற மாநிலங்களில் பாதிப்பு

    அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்:

    ஜூன் மாதத்தில் பிரம்மபுத்திரா மற்றும் பாராக் உட்பட பல ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, 8 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர்.

    கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பைவிட 20% குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

    தமிழ்நாடு:

    வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்தில் (அக்டோபர் 2025) இயல்பை விட 36% கூடுதல் மழைப்பொழிவு பதிவானது.

    லா நினா (La Niña) காலநிலை காரணமாக வடகிழக்குப் பருவமழையில் கூடுதல் மழை மற்றும் புயல் ஆபத்துகள் நெருங்கியது.

    இதில், ராமநாதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.

    • ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
    • கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளது.

    • இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
    • ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 191 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன.

    • அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இலங்கையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அந்நாட்டின் கடல்பகுதியில் உருவான டிட்வா புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே வெள்ளம்-நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்து உள்ளது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 488 நிவாரண மையங்களில் 43,925 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



    இலங்கையில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு இந்தியா உதவிகளை அளிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து ஆபரேசன் சாகர் பந்து திட்டத்தின் கீழ், பேரிடர்கால உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பியது. 

    • மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.

    இலங்கையில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

    கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆபரேஷன் சாகர் பந்து" தொடங்குகிறது. தார்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படையின் C-130 J விமானம் கொழும்பில் தரையிறங்கியது" என்று கூறியுள்ளார்.



    • மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

    • மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன.
    • 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு பஸ்சை வெள்ளம் அடித்துச் சென்றது.

    தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் பஸ்சை மீட்டு பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதேசமயம் அம்பாறை பகுதியில் கார் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் இறந்தனர்.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மட்டக்களப்பின் தென் கிழக்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. எனவே 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

    இதனால் வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது குறித்து அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    • வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து சென்றுகொண்டிருந்தது.
    • கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால் சிக்கல் ஏற்பட்டது.

    வியட்நாமில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

    வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து 32 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் கான் லே மாகாணத்தில் கணவாய் ஒன்றில் இடையே பேருந்து சென்றுகொண்டிருந்தது.

    அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்தின் மேல் பாறைகள் விழுந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியது.

    பல பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்ட நிலையில் கனமழையால் கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால், மீட்புப் படையினரால் பல மணி நேரம் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.

    நள்ளிரவுக்குப் பிறகுதான் மீட்புப் படையினர் பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் உடல்களும் மீட்கப்பட்டன.

    கான் லே மாகாணத்தில் பல மலைப்பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

    • சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது சுரங்க தொழிலாளர்கள் பீதியடைந்த ஓடினர்
    • சுரங்க தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்தது.

    ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

    32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்னிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் காங்கோ உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த கனிம உற்பத்தியில் 80 சதவீதத்தை சீன நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன

    மழைக்காலங்களில் கேரளாவில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். கடந்தாண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவ்வகையில் இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த மண்சரிவில் சிக்கிய தம்பதியரை மீட்க ஆறு மணி நேரம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கணவர் பிஜு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மனைவி சந்தியா மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. மேலும் 6 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. மொத்தம் 22 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.

    கேரளத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 'கனமழை முதல் மிக கனமழை; பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ×