search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd Round of Voting"

    • முதல் சுற்று தேர்தலில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • சென்னையில் 4 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    புதுச்சேரி

    பிரான்ஸ் பாராளுமன்றத்துக்கான முதல் சுற்று தேர்தல் கடந்த 30-ந் தேதி நடந்தது.

    தேர்தலில் பிரான்சு நாட்டுக்கு வெளியே வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய தாங்கள் குடியிருக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.

    தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் உள்ள 4 ஆயிரத்து 535 பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் வாக்களிக்க தகுதியுடையோர் ஆவர். இதற்காக புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் 4 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    முதல் சுற்று தேர்தலில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்களான 4535 பேரில் 892 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதில் 12 வாக்குகள் செல்லாதவை. 3 வாக்குச் சீட்டில் வாக்கே செலுத்தப்படவில்லை.

    சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஜோட் பிராங்க் அதிகளவாக 542 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் 12 விழுக்காடு வாக்குபெற்று முதல் 2 இடங்களை பிடித்த 2 பேர் இடையே 2-ம் சுற்று தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடக்கிறது.

    ×