search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AFGvNZ"

    • இந்தியா- நியூசிலாந்து இடையிலான போட்டி ஐந்து நாட்களும் விளையாடாமல் கைவிடப்பட்டுள்ளது.
    • இங்கிலாந்து போட்டி இதேபோன்று நான்கு முறை விளையாடாமல் கைவிடப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்திய மைதானங்களை அவர்களுடைய சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடத்த இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் முடிவு செய்தன.

    அதன்படி இந்தியாவின் டெல்லி அருகில் உள்ள கிரேட் நொய்டாவில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 9-ந்தேதி போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக கிரேட் நொய்டா மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    மழை நீர் வெளியேறுவதற்கு வழியில்லாததால் முதல் நாள், இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. எப்படியாவது போட்டியை நடத்திவிட வேண்டும் என்ற முனைவில் மின் விசிறி கொண்டெல்லாம் ஆடுகளத்தை சூடுபடுத்தினர்.

    இருந்தபோதிலும் ஆடுகளம் மற்றும் அவுட் பீல்டு மோசமாக இருந்ததாலும், தொடரந்து மழை பெய்ததாலும் 3-வது மற்றும் நாளாவது ஆட்டங்கள் ரத்து செய்ப்பட்ட நிலையில், இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐந்து நாட்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

    போர் போன்ற அசாதாரண சூழ்நிலை அல்லது பெருந்தொற்று போன்ற இக்கட்டான நிலையில்தான் ஐந்து நாட்கள் ஆட்டமும் கைவிடப்படும் நிலை ஏற்படும். ஆனால் மழையால் ஒரு டெஸ்ட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.

    மேலும். இதுபோன்று ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படும் 8-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டிகள் விவரம்:-

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மான்செஸ்டரில் 1890-ல் கைவிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மான்செஸ்டரில் 1938-ல் கைவிடப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து போட்டி மெல்போர்னில் 1970-ல் கைவிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து- பாகிஸ்தான் இடையிலான போட்டி டுனெடினில் 1989-ல் கைவிடப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து இடையிலான போட்டி கயானாவில் 1990-ல் கைவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான போட்டி பைசாலாபாத்தில் 1998-ல் கைவிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து- இந்தியா இடையிலான போட்டி டுனெடினில் 1998-ல் கைவிடப்பட்டுள்ளது.

    • ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 9-ந் தேதி தொடங்க இருந்தது.
    • நொய்டாவில் பெய்து வரும் மழை காரணமாக போட்டி தொடங்க முடியாமல் உள்ளது.

    நொய்டா:

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் 9-ந் தேதி தொடங்க இருந்தது. முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது.

    2-வது நாள் ஆட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்றைய 3-வது நாளில் மழை பெய்ததால் 3-வது நாள் ஆட்டமும் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் மழை காரணமாக 4-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

    • கோரிக்கையை பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களாக டாஸ் கூட போடப்படாமல் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கனமழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலைமை மாறி, தற்போது மழையால் மைதானத்தில் தேங்கிய நீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை.

    கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், போட்டி நடைபெற இருந்த முதல் மூன்று நாட்களாக மைதானத்தில் மழைநீர் தேங்கி இருப்பது, ஈரப்பதம் காயாமல் இருப்பது போன்ற காரணங்களால் போட்டி துவங்கப்படவே இல்லை.

     


    மைதானத்தில் போதுமான வசதி இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இங்கு வரவே கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை லக்னோ அல்லது டேராடூனில் நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை பிசிசிஐ மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக பிசிசிஐ சார்பில் பெங்களூரு மற்றும் கான்பூர் போன்ற மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    "எங்களது முதல் தேர்வு லக்னோ மைதானம் தான். அது கிடைக்காத பட்சத்தில் டேராடூனில் விளையாட நினைத்திருந்தோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை பிசிசிஐ நிராகரித்து விட்டது. இரு இடங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் நொய்டா மைதானம் மட்டும் தான்," என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

    • 2-வது நாளில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
    • மைதானத்தில் தேங்கும் தண்ணீரை துரிதமாக அகற்றுவதற்கு நவீன வசதி வாய்ப்புகள் இங்கு இல்லை.

    நொய்டா:

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் நேற்றுமுன்தினம் தொடங்க இருந்தது. முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. 2-வது நாளான நேற்றைய தினம் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    மைதானத்தில் தேங்கும் தண்ணீரை துரிதமாக அகற்றுவதற்கு நவீன வசதி வாய்ப்புகள் இங்கு இல்லை. இதனால் மைதானத்தை சீக்கிரமாக காய வைக்க முடியவில்லை. அங்காங்கே காணப்பட்ட ஈரப்பதத்தை மின்விசிறியால் உலர்த்த ஊழியர்கள் முயற்சித்தனர். சில இடங்களில் புற்களை பெயர்த்து எடுத்து, அதற்கு பதிலாக பயிற்சி பகுதியில் இருந்து புற்களை கொண்டு வந்து வைத்தனர். ஆனாலும் மோசமான அவுட்பீல்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்ய முடியவில்லை.

    இன்றைய 3-வது நாள் போட்டியாவது நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் மழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    ×