search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agriculture University"

    • கோவை, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பானஅளவில் பெய்யும்
    • மானாவாரி சாகுபடியில் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்ய வலியுறுத்தல்

    கோவை,

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை மூலம் மாநிலஅளவில் நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழித்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் இது எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. எனவே 2 மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

    இந்த நிலையில் கோவை, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை, நீலகிரியில் ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி தமிழகத்தில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தஞ்சை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாக்குமரி, காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குபருவமழை இயல்பானஅளவில் பெய்யும்.

    சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவில் பெய்யும்.

    எனவே அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காலத்துக்கான குறுகிய-மத்திய கால பயிர் ரகங்களை தேர்வுசெய்து பயிரிட வேண்டும், பாசனவசதியுள்ள பகுதிகளில் மட்டும் நீண்டகால பயிர் ரகங்களை தேர்வு செய்யலாம்.

    மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மழைநீரை சேமிக்கும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக 20 அடி இடைவெளியில் சிறுவரப்புகளை அமைக்கலாம். பண்ணை குட்டைகளில் மழைநீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். மானாவாரி சாகுபடியில் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட விதை நேர்த்தி முறைகளை பின்பற்றினால் வடகிழக்கு பருவமழை மூலம் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தக்காளி சாகுபடி ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ .3 முதல் ரூ .6 வரை யே கொள்முதல் செய்ய ப்படுகிறது.

    உடுமலை :

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இங்கு தென்னை,நெல்,வாழை,கரும்பு,மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் சமீப காலங்களாக காய்கறிகள் சாகுபடியில் உரம்,பூச்சி மருந்து செலவு,கூலி உள்ளி ட்ட வை பல மடங்கு அதிகரித்துள்ளது.ஆனால் போதிய விலை கிடைக்காத நிலையால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.குறிப்பாக தக்காளி சாகுபடி ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.அறுவடை செய்த தக்காளியை மொத்த விற்பனை சந்தைக்கு கொண்டு போய் விற்று விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலையே உள்ளது.போக்குவரத்துச் செலவு,அறுவடைக் கூலி கூட கட்டுப்படியாகாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது.இதனால் பல விவசாயிகள் தக்காளி விளைந்து கிடக்கும் நிலத்தை மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாற்றும் நிலையும்,டிராக்டரை விட்டு உழவு ஓட்டி அழிக்கும் அவலமும் நடைபெற்று வருகிறது.தற்போது ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ .3 முதல் ரூ .6 வரை யே கொள்முதல் செய்ய ப்படுகிறது.

    இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விலை முன்னறிவிப்புப் படி தக்காளி விலை உயரும் வாய்ப்பு உள்ளதா என்பது விவசாயிகளின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.அதேநேரத்தில் விலை உயர்ந்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.தமிழ்நா டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் செயல்படுகிறது.விலை முன்னறிவிப்புத் திட்டக்குழு ஓட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி,வெண்டை,கத்தரி போன்ற காய்கறிகளின் விலையில் சந்தை ஆய்வு களை மேற்கொ ண்டது.அதன்படி நடப்பு மே மாதத்தில் தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ .24 முதல் ரூ .27 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை காலமாக இருப்ப தால் மேலும் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தக்காளி விவசாயி களிடையே ஆச்ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தக்காளியை அழித்து விட்டு மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும் எண்ணத்திலிருந்த விவசாயிகளும் இந்த அறிவிப்பால் முடிவை தள்ளிப் போடுவது குறித்து யோசிக்கத் தொடங்கி யுள்ளனர்.ஆனாலும் தற்போது தக்காளி விலை உயர்வது குறித்த வேளா ண் பல்கலையின் அறிவிப்பு குறித்து நம்பிக்கையின்மையே விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது.தக்காளிக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.தக்காளியிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கான குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாகவே தக்காளி விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

    • தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
    • மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும்.

     உடுமலை :

    பூச்சி மேலாண்மையில் அதிக மருந்துகளை தெளிப்பதால் பூச்சிகளின் அடுத்த தலைமுறை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று பாதிப்பின் அளவை அதிகரித்து விடுகிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது சற்று அதிகம் உள்ளது. உதாரணமாக தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இப்பூச்சி உறிஞ்சுவதால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் அதனால், ஏற்படும் அடுத்த கட்ட விளைவால் மகசூல் பாதிப்பு அதிகம் உள்ளது.

    அதாவது வெள்ளை ஈ சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற ஒரு திரவத்தை சுரக்கிறது. அதை சுற்றி பூஞ்சைகள் உருவாகி கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இதற்கு விவசாயிகள் பலர் மருந்துகளை அதிகளவில் தெளித்து விடுகின்றனர். முதன்முறை மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும். அதன் அடுத்தகட்ட தலைமுறை, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி விடுவதால் மருந்து பயனின்றி போகும் நிலை உருவாகும். இதனால் பூச்சியை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை வாயிலாக மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பூச்சி மேலாண்மையால் எப்படி கட்டுப்படுத்துவது? முதலில் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் தடவிய அட்டையை வைத்து பூச்சியை ஈர்க்க வேண்டும். இதன் வாயிலாக பாதியை கட்டுப்படுத்தலாம். பல்கலை தரப்பில் ஒட்டுண்ணி தயாரித்து வழங்கப்படுகிறது. அதை பத்து மரத்திற்கு ஒன்று என மரத்தில் கட்டி தொங்கவிடவேண்டும். ஒருவர் ஒரு நிலத்திற்கு இதை செய்வதால் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது. விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைந்த மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

    வாடல் நோய் தென் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள இடங்களில் துவங்கி, வேகமாக பிற தோட்டங்களுக்கும் பரவி வருகிறது. ஆரோக்கியமற்ற மரங்களே முதலில் பாதிக்கப்படுகின்றன. இதற்கு மரங்களை வலுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேளாண் அதிகாரிகள் தோட்டங்களுக்கு சென்று, செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர். விவசாயிகள் பல்கலையில் அளிக்கும் திறன் மேம்பாடு பயிற்சி, ஒட்டுண்ணி போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் .

    • அனைத்து துறைகளிலும் அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • வேளாண் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பங்களை மையப்படுத்தி வரும் கல்வியாண்டில் இரண்டு புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், மிஷின் லேர்னிங், டிரோன், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வரவால் அனைத்து துறைகளிலும் அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    வேளாண் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் போன்ற சவால்களை தொழில்நுட்ப உதவிகளுடன் கூடிய கண்டுபிடிப்புகளை வைத்தே எதிர்கொள்ள இயலும்.அதன்படி வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி பிரிவில், பி.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகள் வரும் கல்வியாண்டு துவங்கவுள்ளன.

    இது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில் வேளாண் துறையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பயன்பாடு அவசியம். அதற்காக, வேளாண் மாணவர்கள் தயாராகவேண்டியது அவசியம். பி.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது பாடத்திட்டம் நவீன தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி அறிமுகப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன.பி.டெக்., பிரிவு அறிமுகப்படுத்தலாமா அல்லது எம்.டெக்., அறிமுகப்படுத்தி அனைத்து வேளாண் மாணவர்களும் இதில் சேரும் வகையில் செய்யலாமா, இரண்டும் அறிமுகப்படுத்தலாமா போன்ற ஆலோசனையில் சிறப்பு குழு ஈடுபட்டுள்ளது என்றார்.

    • மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகிறது.
    • கோடையில் மழை நீரை தக்க முறையில் வேரில் சேமிக்க உதவும்.

    குடிமங்கலம் :

    வறண்ட வானிலை நிலவு வதால் தென்னை மரங்களு க்கு உள்சாய்வு வட்டவடிவ பாத்தி அமைக்கலாம் என வேளாண் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகி றது.அதில் திருப்பூர் மாவட்டத்துக்கான சாகுபடி பரிந்துரையில், வறண்ட வானிலை நிலவுவதால் தென்னை மரத்தை சுற்றி உள்சாய்வு வட்ட பாத்திகளை அமைப்பது, கோடையில் மழை நீரை தக்க முறையில் வேரில் சேமிக்க உதவும். சட்டிக்கலப்பை கொண்டு உழவு செய்து கோடை மழையினை சேமிக்க லாம்.காய்கறி பயிர்களில், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கம் தென்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு கரைசலை தெளிக்க வேண்டும்.வாழை சாகுபடியில் 5 மாதத்துக்கு மேல் வளர்ச்சி தருணத்திலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை உயர்ந்தும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்பு ள்ளது. தீவனப்பயிர்கள் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் பாசன வசதியுள்ள விவசாயிகள் 10 சதவீத நிலத்தில் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.ஆட்டுக்கொள்ளை நோய் தாக்குதல் ஏற்படுவதை தவிர்க்க கால்நடை மருத்துவ மனையில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். நிலவும் வானிலையால் மா பூங்கொத்துகளில் தத்துப்பூச்சிகளின் தாக்குதல் தென்படுகிறது.ஒரு மில்லி தயோமீத்தக்ஸிம் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டு ள்ளது.

    • நிலக்கடலை பயிரிடப்பட்டு 85.82 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளது.
    • நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் விலை முன்னறிவிப்பு திட்டத்தில் எண்ணெய் வித்துக்களு க்கான விலை முன்னறிவிப்பினை சந்தை நிலவரத்தின் அடிப்படை யில் வெளியிட்டுள்ளது.

    வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இரண்டாவது முன்கூட்டிய அறிவிப்பின் படி, இந்தியாவில் 2022-23ம் ஆண்டுக்கான நிலக்கடலை 60.15 லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 85.82 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை மற்றும் சந்தை ஆய்வுகளை வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதன்படி அறுவடையின் போது ( மே-2023) தரமான நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால இறவை வரத்தை பொறுத்து நிலக்கடலை விலையில் சிறிய, ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    தமிழகத்தில் 0.52லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 0.34லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும். விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சித்திரை, ஆடி, கார்த்திகை, மாசி ஆகிய பட்டங்களில் எள் விதைக்கப்படுகிறது. சிவப்பு எள் எண்ணெய் உற்பத்திக்கும், கருப்பு எள் முக்கிய மிட்டாய் வகைகளில் பயன்படுத்தவும், வெள்ளை எள் ஏற்றுமதிக்கும் அதிகம் பயன்படுத்தப்ப டுகிறது. விலை முன்னறிவிப்பு குழு கடந்த 12 ஆண்டுகள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய எள் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.ஆய்வு முடிவுகளின் படி அறுவடையின் போது( மே -2023)தரமான எள் பண்ணை விலை கிலோவிற்கு 120 முதல் 125 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேற்கூற ப்பட்ட சந்தை ஆலோசனையின் படி விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை த்துள்ளது. மேலும் விபரங்க ளுக்கு 0422-2431405/6611278/ 2450812 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×