என் மலர்
நீங்கள் தேடியது "All England Badminton"
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், தைவானின் சு லீ யாங் உடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 13-21 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-17, 21-15 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து விலகினார்.
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜெர்மனியின் யுவான் லீயுடன் மோதினார்.
முதல் செட்டில் பிவி சிந்து 21-10 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது காயம் காரணமாக யுவான் லீ போட்டியில் இருந்து விலகினார். இதனால் பிவி சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், 2வது சுற்றுக்கும் முன்னேறினார்.
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் செ யங்குடன் மோதினார்.
இதில் பிவி சிந்து 19-21, 11-21 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
- இத்தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அன்டோன்சென்னுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 24-22 என முதல் செட்டைக் கைப்பற்றினார். 2வது செட்டை 21-11 என சென் இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் பின்தங்கி இருந்த லக்ஷயா சென் கடுமையாக போராடினார்.
இறுதியில், லக்ஷயா சென் 24-22, 11-21, 21-14 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
- இத்தொடரில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசிய வீரர் லீயுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 20-22 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட சென் அடுத்த இரு செட்களை 21-16, 21-19 என கைப்பற்றினார்.
இறுதியில், லக்ஷயா சென் 20-22, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
- இத்தொடரில் இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசிய வீரர் கிறிஸ்டியுடன்
மோதினார்.
இதில் லக்ஷயா சென் 12-21 என முதல் செட்டை இழந்தார். அடுத்த செட்டை 21-10 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் கிறிஸ்டி 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதியில், லக்ஷயா சென் 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
- தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்பில் இருந்து சிந்து விலகி இருந்தார்.
- சிந்து தனது முதல் மோதலில் தென்கொரியாவின் கா என் கிம்மை சந்திக்கிறார்.
பர்மிங்காம்:
பழம்பெருமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி தொடரில் இந்திய வீரர்கள் பிரகாஷ் படுகோனே 1980-ம் ஆண்டும், கோபிசந்த் 2001-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்றனர். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் பட்டம் வென்றதில்லை.
மொத்தம் ரூ.12.65 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து களம் இறங்குகிறார். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகிய சிந்து தனது முதல் மோதலில் தென்கொரியாவின் கா என் கிம்மை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத், சிங்கப்பூரின் ஜியா மின் யோவுடன் மோதுகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார். இன்னொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பிரான்சின் தோமா ஜூனியர் போபோவுடன் தனது மோதலை ஆரம்பிக்கிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, துருவ் கபிலா-தனிஷா, சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியாத் ஜோடியும் கலந்து கொள்கின்றன.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
- மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பிரெஞ்சு வீரரான டோமா ஜூனியர் போபோவுடன் மோதினார்.
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் டோமா 21-19, 21-16 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் பிரணாயை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே பிரனாய் வெளியேறியது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கோகி வாடனாபியை சந்திக்கிறார். அந்த போட்டி மாலை 6.25 மணிக்கு தொடங்குகிறது.