என் மலர்
நீங்கள் தேடியது "BJP MP Nishikant Dubey"
- தமிழ்நாடு கோவில்களில் கூட, சமஸ்கிருதத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
- ஆங்கிலேயர்களின் மொழியை செயல்படுத்துவதில் மட்டுமே திமுகவினர் ஆர்வம் காட்டுகிறார்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "தமிழை விட சமஸ்கிருதம்தான் பழமையான மொழி" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மக்களைத் தூண்டிவிட மட்டுமே திமுக விரும்புகிறது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள், ஆனால் சமஸ்கிருதம் அதைவிட பழமையான மொழி.
தமிழ்நாடு கோவில்களில் கூட, சமஸ்கிருதத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடத்தை திமுக எதிர்க்கிறது. அவர்கள் ஆங்கிலேயர்களின் மொழியை செயல்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
BJP MP Nishikant Dubey -"DMK only wants to incite people.Tamil is ancient language but Sankrit is Oldest language. Puja is done in Sanskrit only in Tamil temples also.Congress increased seats in Madhya Pradesh and West Bengal in 1973 yet DMK is allying with INC that… pic.twitter.com/xUQHTWHo9C
— News Arena India (@NewsArenaIndia) March 10, 2025
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டம் துல்லு கிராமத்தில் உள்ள சில வீடுகளில் வளர்க்கப்பட்ட எருமை மாடுகளை காணவில்லை. அவற்றை பொதுமக்கள் தேடி வந்த நிலையில், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து புதன்கிழமை காலையில் மாட்டுடன் வந்த நபர்களை அப்பகுதி மக்கள் பிடித்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த துல்லு கிராம மக்கள் அங்குசென்று, அந்த நபர்களை மாடு பிடித்து மாடு கடத்தும் கும்பல் என நினைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 3 பேர் பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துல்லு கிராமத்தைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரின் வழக்கு செலவுகளுக்கான பணத்தை தான் செலுத்தப் போவதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகந்த் துபே தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட முடிவு என்றும், 4 பேரையும் அநியாயமாக போலீசார் கைது செய்திருப்பதாகவும் கூறினார்.
‘ஒட்டுமொத்த கிராமமே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. திருட்டு போன மாடுகளின் உரிமையாளர்கள் என்பதற்காக 4 பேரை மட்டும் தனிமைப்படுத்தி கைது செய்திருப்பது ஏன்?’ என்றும் துபே கேள்வி எழுப்பி உள்ளார்.
நிஷிகந்த் துபே, கோட்டா மக்களவைத் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #JharkhandLynching