search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chhatrapati Shivaji Statue"

    • சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

    "சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயரோ அரசரோ இல்லை. நமக்கு அவர் தெய்வம். இன்று, நான் அவரது காலடியில் தலை வணங்குகிறேன், என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் மதிப்புகள் வேறுபட்டவை. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை."

    "சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ஆனால் அவரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை. நான் இங்கு இறங்கியதும், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன், இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."

    "கடந்த பத்து ஆண்டுகளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா திறன் மூலம் கிடைக்கும் பலன்களை இந்த மாநிலமும், முழு நாடும் பெறுவதை உறுதிசெய்வதற்காகவே வத்வான் துறைமுகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது," என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
    • பாராளுமன்றத்தில் அம்பேதகர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன்.

    பழைய பாராளுமன்றத்தில் விரவி இருந்த தலைவர்களின் சிலைகள் அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு புதிய பாராளுன்றத்தின் பின்புறத்தில் 'பிரேர்னா' ஸ்தல் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி உள்ளிட்ட 50 பேரின் சிலைகள் இதில் அடங்கும்.

     

     

    பிரேர்னா ஸ்தல் பூங்காவை நேற்று {ஜூன் 16) துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். தலைவர்களின் சிலைகளை இடம் மாற்றும் முடிவுக்கு தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இடமாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், யாரிடமும் கருத்து கேட்காமல் எந்த ஒரு விவாதமும் இன்றி பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பாக தலைவர்களின் சிலைகள் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளன. தலைவர்களின் சிலைகளை தன்னிச்சையாக இஷ்டத்துக்கு இப்படி இடம்மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சுமார் 50 சிலைகள் இடம்மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

    முக்கியமாக மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் பாராளுமன்றத்துக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிவந்தன. பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் முன்னாள் இருந்த மகாத்மா காந்தியின் தியான சிலை அருகே ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தும்போது உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.

     

    அம்பேத்கர் சிலை இந்திய அரசியலமைப்பின் சக்தியை உணர்த்துவதாக இருந்தது. 1960 களில் எனது கல்லூரிப் பருவத்தில் பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன். தற்போது இது அனைத்தையும் சீர்குலைக்கும் வகையில் அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று விமர்சித்துள்ளார்.

    ×