search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christ Church"

    • மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா 5 நாட்கள் நடந்தது.
    • கன்வென்ஷன் கூட்டத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த சாம்சன் தேவசெய்தியை அருளினார்.

    நாசரேத்:

    மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா 5 நாட்கள் நடந்தது. வகுத்தான் குப்பம் சேகரம் மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன பண்டிகை நடந்தது. 2 நாட்கள் நடந்த கன்வென்ஷன் கூட்டத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த சாம்சன் தேவசெய்தியை அருளினார்.

    3-ம் நாள் பண்டிகை ஆராதனையை ஓய்வு பெற்ற குரு பொன்னுசாமி தலைமையில், சேகர குரு செல்வராஜ் முன்னிலையில் நடந்தது . இதில் சபை ஊழியர்கள் ஸ்டான்லி ஜான்சன் துரை, ஏசா வேதராஜ், சர்ச்சில், ஜாய்சன், ஸ்டீபன், ஜெபராஜ் ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 4-ம் நாள் மாலை கலை நிகழ்ச்சியும், 5-ம் நாள் காலை அசன ஆயத்த ஜெபமும், அதனைத் தொடர்ந்து மாலை அசன பண்டிகையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர தலைவர்கள் செல்வராஜ், பாஸ்கரன் சபை ஊழியர் வனமோகன் ராஜன் , சபை மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×