search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleanliness work in schools"

    • பள்ளி திறப்பு ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறப்பதாக இருந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் பள்ளி திறப்பு ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    பள்ளி திறப்புக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    இதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மரம், செடி, கொடி கள், புதர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. வகுப்பறைகளில் போர்டுகளுக்கு கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கழிப்பறைகள், பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. தூய்மை பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. 

    ×