என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "college student kills"
மேட்டுப்பாளையம் அடுத்த தொட்டிபாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். அரசு பஸ் டிரைவர். இவரது மகன் தினேஷ்குமார்(19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்(18) வருண்(19) ஸ்ரீஹரி(16) சூரியா(19)ஆகியோருடன் நெல்லித்துறை அடுத்துள்ள விளாமரத்தூர் குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றார். அவர்கள் 5 பேருக்கும் நீச்சல் தெரியாது. தினேஷ்குமார் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன், ஏட்டு தங்கவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் அரை மணிநேரம் போராடி தினேஷ்குமார் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலிக்கோட்டை கிட்டியா கவுண்டனூரை சேர்ந்தவர் கணேசன் (48). இவரது மனைவி அன்னக்கிளி.இவர்களுக்கு தீபக் கிருஷ்ணன்(21), அன்பு(10) என்ற 2 மகன்கள் உள்ளனர். தீபக் கிருஷ்ணன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3 -ஆம் ஆண்டு படித்து வந்தார்.
கணேசன் தனது குடும்பத்தினருடன் சோமனூர் கருமத்தம்பட்டியில் உள்ள உறவினர் முத்துசாமி என்பவரது வீட்டிற்கு வந்திருந்தார். தீபக் கிருஷ்ணன் தனது கல்லூரி நண்பர்கள் கூறியதை மனதில் நினைத்து மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் உள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக தனது தம்பி அன்பு. மற்றும் நண்பர்கள் அருண்(16) ஜேம்ஸ்(19)தினேஸ்(19) ஆகியோருடன் வந்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் நீச்சல் தெரியாது. அப்போது திடீரென தீபக்கிருஷ்ணன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். தத்தளித்த அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் சசிதரன். இவரது மகன் ஸ்ரீஹரி (வயது 18). இவர் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஸ்ரீஹரி பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அறையில் இருந்த ஸ்ரீஹரி தனது நண்பர்கள் 5 பேருடன் டீ குடிப்பதற்காக வெளியே வந்தார். பீளமேடு ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்த இவர்கள் அங்கு பெட்ரோல், டீசல் கொண்டு வரும் ரெயில் நிற்பதை பார்த்தனர்.
அப்போது ஸ்ரீஹரி விளையாட்டாக உயர் மின் அழுத்த வயரில் என்னதான் இருக்கிறது பார்க்கலாம் என்று கூறி அங்கு நின்று கொண்டு இருந்த ரெயில் மீது ஏறினார்.
இதனை அங்கு இருந்த அவரது நண்பர்கள் வேண்டாம் என்று தடுத்தனர். எதையும் காதில் வாங்கி கொள்ளாத ஸ்ரீஹரி வேகமாக ரெயில் மீது ஏறி அந்த வழியாக சென்ற உயர் மின் அழுத்த மின்சார வயரை தொட்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவஇடத்திலேயே ஸ்ரீஹரி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு உடல் கருகி இறந்து கிடந்த ஸ்ரீஹரியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பீளமேடு ரெயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தவமணி மகன் சீனிவாசன்(வயது22). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அஞ்சுகுழிபட்டியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று நத்தம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பள்ளி வாகனம் அவர் மீது மோதியது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதே கல்லூரியில் சீனிவாசனுடன் படித்து வந்தவர் பிருந்தாமேரி(19). திண்டுக்கல் முத்தழகுபட்டி கிழக்குதெருவை சேர்ந்த அவர் சீனிவாசனை காதலித்து வந்தார். விபத்தில் அவர் உயிரிழந்ததை அறிந்தவுடன் இன்று காலை விஷம் குடித்து கல்லூரிக்கு வந்தார்.
சிறிதுநேரத்திலேயே மயக்கமடைந்து விழுந்தார். உடனே அவரது தோழிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர்தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கேரளா மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 23 ). கோழிக்கோட்டை சேர்ந்த அகமது ஷெரீப் என்பவரது மகன் சையத்அப்துல் பாசித்( 24). இவர்கள் 2 பேரும் சூலூரில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி ரோட்டில் சென்றனர். சூலூர் பிரிவு அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதியது. விபத்தில் சம்பவஇடத்திலேயே விஷ்ணு பரிதாபமாக இறந்தார். சையத் அப்துல் பாசித் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews