என் மலர்
நீங்கள் தேடியது "communal politics"
- சத்தீஸ்கரில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
- பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் துணை முதல்வர் கலந்து கொண்டார்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாநகரட்சி மேயராக பதவியேற்ற பாஜகவின் பூஜா விதானி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, 'நாட்டின் இறையான்மையைக் காப்பேன்' என்பதற்குப் பதிலாக 'வகுப்புவாதத்தைக் காப்பேன்' என படித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கரில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக அமோக வெற்றி பெற்றது.
பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் அருண் சாவோ, மத்திய அமைச்சர் டோகன் சாஹு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூஜா விதானி மேயர் பதவியேற்பு விழாவில் 'இறையான்மை' என்பதை 'வகுப்புவாதம்' என்று தவறாக வாசித்ததை கவனித்த மாவட்ட ஆட்சியர் உடனே சுட்டிக்காட்டிய நிலையில் பூஜா விதானி மீண்டும் சரியாக வாசித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது
இந்தநிலையில் 4 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்து நாக்பூரில் நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-
விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமை, பால் விலை வீழ்ச்சி உள்பட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் தற்போதைய பிரச்சினைகள் எதுவும் புதிதானவை அல்ல, ஏற்கனவே இருப்பவைதான். இவற்றுக்கு சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் விவசாயிகளின் அதிகப்படியான உற்பத்தி ஆகியவையே காரணம்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீண்ட மற்றும் குறுகிய கால திட்டங்கள் வகுத்து போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் உற்பத்தி செய்யும் உபரி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும் பா.ஜனதா ஒருபோதும் சாதி, மதம் மற்றும் மொழி ஆகியவற்றை பயன்படுத்தி பிரிவினை அரசியலில் ஈடுபடாது எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் வகுப்புவாத அரசியலாலேயே பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். #BJP #NitinGadkari