என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dolphin dead"

    திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை ஒரு டால்பின் மீன் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அவ்வப்போது சில மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது வழக்கம். இதை அந்த பகுதி மீனவர்கள் எடுத்து செல்வார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை ஒரு டால்பின் மீன் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. அப்பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அந்த டால்பின் ஓங்கல் எனப்படும் வகையை சேர்ந்தது. டால்பின் முழுவதுமாக அழுகி காணப்பட்டதால் அப்பகுதியில் நின்றவர்கள் அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். டால்பின் இறந்தது எப்படி? கப்பல் மோதியதில் அது இறந்ததா? அல்லது நச்சு ஏதேனும் தின்றதில் இறந்ததா? என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ×