search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guidance program for"

    • கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற வழிகாட்டு நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பவானி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்து பேசும்போது, மாணவர்கள் மத்தியில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. முடியாது என்று சொல்லும் மாணவர்கள் ஜெயிக்க முடியாது.

    முடியும் என்று சொல்லும் மாணவர்கள் சாதிக்கலாம். உயர்ந்த பதவியை அடைய கடின உழைப்பு கொடுக்க வேண்டும்.

    கடின உழைப்பு என்றால் படிப்பில் முழு கவனம் செலுத்துதல், கடின உழைப்பை கொடுத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கூறினார்.

    பள்ளி படிப்புக்கு பிறகு மேல்படிப்பு என்ன படிக்கலாம் என வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ் காந்தி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது இந்த படிப்பு படிக்கிறேன் என்று வேலை தேடுவதை விட வேலைக்கேற்ற படிப்பை உயர்கல்வியில் படிக்க வேண்டும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஓடத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பி.மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, ஓய்வு பெற்ற விவசாய ஆசிரியர் மதியழகன், கவுன்சிலர் பரமசிவம், பிரஸ் நந்தகோபால் சதாசிவம், வெள்ளியங்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    ×