என் மலர்
நீங்கள் தேடியது "Horticultual crops"
- ராபி பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப்பயிர்களான வாழை, வெங்காயம், மிளகாய் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
- ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,185 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.23,700 வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் ராபி பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப்பயிர் களான வாழை, வெங்காயம், மிளகாய் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறு வட்டங்களில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிர்பாராத இயற்கைப் பேரிடரிலிருந்து பயிர்களைக் காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் காப்பீட்டு கட்டணத்தை செலுத்தி உரிய விண்ணப்பித்தல் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் .
மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய 31-1-2023 கடைசி நாளாகும்.
ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,185 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.23,700 வழங்கப்படும். வாழை ஏக்கருக்கு ரூ.3,582 பிரிமியம் செலுத்த வேண்டும் மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.71,650. காப்பீடு செய்ய கடைசி நாள் 31.1.2023. வெங்காயம் ஏக்கருக்கு ரூ.1,125. பிரிமியம் செலுத்த வேண்டும். காப்பீட்டுத் தொகை ரூ.22,500. காப்பீடு செய்ய கடைசி நாள் 31.1.2023.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் அல்லது உரிய வட்டாரங்களில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.






