search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "How did the scooter"

    • எதிர்பாராத விதமாக திடீரென்று ஸ்கூட்டர் தீ பற்றி எரிய தொடங்கியது.
    • மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபு ரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 36). இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் புளியம்பட்டி அடுத்த காரப்பாடியில் இருந்து பு.புளியம்பட்டி ரோட்டில் வந்தார்.

    இதை தொடர்ந்து அவர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது திடீ ரென அவரது ஸ்கூட்டர் பழுதடைந்து நின்று விட்டது. இதையடுத்து ஸ்கூட்டரை மீண்டும் இயக்க முயன்றார். ஆனால் இயக்க முடியவில்லை.

    அப்போது ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோல் வாடை வீசியது. இதையடுத்து பெட்ரோல் டேங்கில் இருந்து புகை வந்தது. இதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக திடீரென்று ஸ்கூட்டர் தீ பற்றி எரிய தொடங்கியது.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன் ஸ்கூட்ட ரை விட்டு விட்டு ஓடி உயிர் தப்பினார். ஸ்கூட்டர் முழு வதும் எரிந்து சேதமடைந்தது. இதைக் கண்டு அந்த வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து ஸ்கூட்டர் எப்படி தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×