search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian sports"

    • 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர்.
    • ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது.

    2024-ம் ஆண்டு முழுவதும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களால் ஏற்பட்ட சில டாப் உணர்ச்சிமிக்க தருணங்களைப் பற்றி பார்ப்போம்.

    2024-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஜாக்பாட் என்று சொல்லலாம், அந்தளவிற்கு அதிகமான பதக்கங்களையும், சாம்பியன் பட்டங்களையும் விளையாட்டு வீரர்கள் வென்றுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி பெருமை சேர்த்தார். 

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் ஐன் நகரில் ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 வயதான ஷர்வானிகா என்ற சிறுமி, யு-8 கிளாசிக்கல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் யு-8 ரேபிட் பிரவு மற்றும் பிளிட்ஸ் பிரிவில் தங்கம் பதக்கமும் பெற்றிருந்தார்.

    இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல், மெஹுலி கோஷ் ஜோடி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.

    குரோஷியா நாட்டில் நடைபெற்ற ஜாக்ரெப்பில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் அமன் ஷெராவத் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்திருந்தார். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தாய்லாந்தை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஹங்கேரியில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளின் அணி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி அதிலும் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று சாதித்தார்.

    பாரிஸில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர். இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அதன் பின்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கல பதக்கம் வென்று சாதித்தனர். அதே நேரத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    57 கிலோ மல்யுத்தத்தில் அமன் செஹ்ராவத் போட்டியிட்டு வெண்கலம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் சுப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னில் குசலே வெண்கல பதக்கம் வென்று சாதித்தார். இது அவரின் அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும்.

    அதே போல் பாரீசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களை வென்றது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல்(உயரம் தாண்டுதல்), பாட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

    இதில் தொடர்சியாக பாராலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை மாரியப்பன் தங்கவேல் பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதித்திருந்தார்.

    பி.சி.சி.ஐ சார்பில் பிளேயர் ஆஃப் தி இயர் விருது நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

    இந்தியாவில் விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருதை முகமது ஷமி (கிரிக்கெட்), கிருஷ்ணன் பகதூர் பதக் (ஹாக்கி), பவன் குமார் (கபடி), ரித்து நெகி (கபடி), நஸ் ரீன் (கோ-கோ), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சுடுதல்), ஈஷா சிங் (துப்பாக்கி சுடுதல்), உள்ளிட்ட 27 பேருக்கு சிடைத்தது.

    மேலும் துரோணாச்சார்யா விருதை லலித்குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்) ஆகியோருக்கு கிடைத்தது. துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன் (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை மஞ்சுஷா கன்வர் (பாட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    2019-ம் ஆண்டிலிருந்து 2023-ம் ஆண்டுவரை டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முகமது ஷமி, அஸ்வின், பும்ரா, கில், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பெற்றுக்கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு விளையாட்டு துறையில் அவர் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக தெலங்கானா அரசு டி.எஸ்.பி. பொறுப்பு வழங்கியது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்.சி.பி. அணி டபள்யூ.பி.எல். கோப்பை தட்டி சென்றனர்.

     பா.ஜ.க. எம்.பி-யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டம் நடத்தியது, 100 கிராம் எடையை காரணம் கூறி பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது, இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு வினேஷ் போகத் தனது ஓய்வை அறிவித்தார். 

    மத்திய அரசு சார்பில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருக்கான பெயர் பட்டியல் அண்மையில் வெளியானது இதில் பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டு முறை வெண்கலம் வென்ற மனு பாக்கர் பெயர் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ஆடவருக்கான யு(Under)-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 

    • ஐசிசி உறுப்பினர்களில் பிசிசிஐ அதிக வருமானம் ஈட்டும் வாரியமாக உள்ளது
    • ஆஸ்திரேலிய வாரியத்தை விட பிசிசிஐ 28 மடங்கு அதிக மதிப்பு உடையது

    பல விளையாட்டுகள் இந்தியாவில் பிரபலமாக இருந்தாலும், பெரும்பான்மையான இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்குத்தான் முதலிடம் தருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

    தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு, பிசிசிஐ (BCCI) எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் இயங்குகிறது.

    ஐசிசி (ICC) எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்புடன் இந்தியாவின் சார்பான உறுப்பினராக இணைந்திருந்தாலும், ஐசிசி எடுக்கும் முடிவுகளில் பிசிசிஐ ஆதிக்கம் செய்யும் அளவிற்கு பலம் பொருந்தி இயங்கி வருகிறது.

    இது ஒரு தனியார் அமைப்பாக செயல்படுவதால், இதன் வருமானம் இந்திய அரசாங்கத்தை சார்ந்து இல்லை. மற்ற வாரியங்களை விட ஐசிசி அமைப்பின் பெரும்பான்மை வருமானம் பிசிசிஐ அமைப்பிற்கே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் நிகர மதிப்பு ரூ.18,700 கோடி ($2.25 பில்லியன்) என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்தியாவிற்கு அடுத்த நிலையில், இரண்டாவது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) அமைப்பு ரூ.660 கோடி ($79 மில்லியன்) மட்டுமே ஈட்டுகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2023 விளையாட்டு தொடரில் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் வருமான அடிப்படையில், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விட 28 மடங்கு அதிக நிகர மதிப்பு கொண்டுள்ளது.

    கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே இந்திய ரசிகர்கள் தரும் அதிக வரவேற்பினால், பிற நாடுகளும் இந்திய அணியினர் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுவதையும் அதன் மூலம் வரும் விளம்பர வருவாயையும் பெரிதும் விரும்புகின்றனர்.

    2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் (IPL) எனப்படும் இந்திய பிரீமியர் லீக் விளையாட்டு தொடருக்கு பிறகு பிசிசிஐக்கு கிடைத்து வரும் வருமானம் ஆண்டுதோறும் மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×