search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • உ.பி. தியோரியா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 15-ந்தேதியாகும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 15-ந்தேதி ஆகும்.

    தியோரியா தொகுதியில் ஜூன் 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஷஷாங் மானி திரிபாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

    தேர்தல் அலுவலகத்திற்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்தவற்கான நேரம் முடியும் தருவாயில் இருந்து. இந்த நிலையில் ஷஷாங்க் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான பைல் உடன் அலுவலகத்தை நோக்கி ஓடோடி வந்தார்.

    அவசரமாக தொண்டர்களை விலகச் சொல்லி நேரம் முடிவதற்குள் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்ய டோக்கன் வழங்கப்படும். அதன்படி வேட்பாளர்கள் சரியான நேரத்திற்கு முன்னதாகவே அங்கே இருப்பார்கள். ஆனால் தொண்டர்கள் காத்திருக்க வேட்பாளர் ஓடோடி வந்தது வியப்பாக பார்க்கப்படுகிறது.

    • இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் மீது கோத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஏற்கெனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம் கோத்ராவில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது

    நீட் தேர்வு முடிந்த பிறகு 26 மாணவர்களின் தேர்வுத்தாள்களை பதில் எழுதி அனுப்புவதாகக்கூறி ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.10 லட்சம் பேரம் பேசி பெற்றதாக தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் மீது கோத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    • நடிகை லைலா கான் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர்.
    • தண்டனை விவரம் மே 14-ந்தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

    நடிகை லைலா கான், அவரது தாயார் மற்றும் லைலாவின் நான்கு குழந்தைகளை கொலை செய்ததாக லாலா கானின் தாயாரின் 3-வது கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கொலை செய்ததுடன் தடயங்களை அழித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்றது. இது தொடர்பாக மும்பையில் உள்ள செசன்ஸ் நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது லைலா கான், அவரது தாயார், லைலாவின் நான்கு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் லைலா கானின் தாயாரின் 3-வது கவணர் பர்வேஸ் தக் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    வருகிற 14-ந்தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லைலா கானின் தாயார் செலினாவின் 3-வது கணவர் பர்வேஷ் தக் ஆவார்.

    மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் உள்ள இகாட்பூரியில் உள்ள அவர்களுடைய பங்களாவில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கொலை நடைபெற்றது.

    செலினாவின் சொத்து தொடர்பாக செலினாவுக்கும்- பர்வேஷ் தக்கிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தக் முதலில் செலினாவை கொலை செய்துள்ளார். பின்னர் லைலா கான் மற்றும் அவரது நான்கு குழந்தைகளை கொலை செய்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் போலீசாரால் தக் கைது செய்யப்பட்ட பின் கொலை நடந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது. அடையாளம் தெரியாத அளவிற்கு உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. தக்கிற்கு எதிராக 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 13 வருடங்கள் கழித்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
    • வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும். கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள். சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாராளுமன்ற தேர்தலின் பொது ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் இருப்பது பாஜகவின் பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹரின் மகன் என்றும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 7-ம் தேதி வாக்குச் சாவடிக்கு தனது தந்தையுடன் சென்று வாக்களிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    அந்த வீடியோவில் தந்தையும் மகனும் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி சந்தீப் சைனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

    • இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது.
    • அதேவேளையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்தியாவில் இந்து மக்கள் சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது:-

    இந்து மக்கள் தொகை குறைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம். இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது.

    ஆனால் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது. 1950-ல் 9.84 சதவீதமாக இருந்தது. தற்போது 17.09 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இது அனைத்தும் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால் நடந்துள்ளது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1950-ல் கிறிஸ்தவ மக்கள் தொகை 2.24 சதவீதமாக இருந்த நிலையில், 2015-ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 5.38 சதவீதம் உயர்வாகும். ஜெயின் சமூகத்தினர் தொகை 1950-ல் 0.45 சதவீதமாக இருந்தது. 2015-ல் 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    சீக்கிய சமூகத்தினர் 1950-ல் 1.24 சதவீதம் இருந்தனர். 2015-ல் 1.85 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இது 6.58 சதவீதம் உயர்வாகும். பார்சி சமூகத்தினர் 1950-ல் 0.03 சதவீதம் இருந்தனர். 2015-ல் 85 சதவீதம் குறைந்து 0.004 சதவீதமாக குறைந்துள்ளனர்.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத்தில் உள்ள தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக ஜஸ்வந்த்சிங் பாபோர் உள்ளார்.

    இந்நிலையில், தாஹோத் மக்களவைத் தொகுதியில் உள்ள பர்தாம்பூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதியின் பாஜக எம்.பியின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றினார். அது சம்பந்தமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் நேரடியாக ஒளிபரப்பினார்.

    பின்பு விஜய் பாபோர் அந்த வீடியோவை நீக்கினார். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தாவியாட் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், பர்தாம்பூர் வாக்குச்சாவடியில், மே 11-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தாஹோத் தொகுதியில் 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ஒருவரான ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் "ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    மோடியின் பொய் பிரச்சாரத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம். வேலையை தேர்ந்தெடுங்கள் வெறுப்பை அல்ல. பதவி கைவிட்டுப் கோகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார்" இளைஞர்கள் உத்தரவாதம் குறித்து பேசியுள்ளார்.

    • கவர்னர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
    • சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருப்பதாக கவர்னர் தெரிவித்திருந்தார்.

    மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    ஆனால் சிசிடிவி காட்சிகள் 100 பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள போலீசாரிடம் வழங்கப்படமாட்டாது என கவர்னர் மாளிகை நேற்று தெரிவித்திருந்தது.

    இ-மெயில் அல்லது டெலிபோன் மூலமாக வேண்டுகோள் விடுக்கும் முதல் 100 பொதுமக்களுக்கு கவர்னரை மாளிகையில் இன்று காலை சிசிடிவி காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிவித்திருந்தது.

    அந்த வகையில் இன்று காலை பொதுமக்களுக்கு சிசிடிவி வீடியோ காட்சியகள் திரையிடப்பட்டன.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தில் "92 பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளை பார்வையிட வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும் சிலர்தான் சிசிடிவி காட்சிகளை பார்க்க வந்தனர். இந்த விவகாரத்தில் மக்கள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது." எனத் தெரிவித்துள்ளது.

    அந்த பெண் ஏப்ரல் 24-ந்தேதி மற்றும் மே 2-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் கவர்னர் மாளிகையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    மே 2-ந்தேதி மாலை 5 மணியளவில் வடக்குப் பகுதியில் உள்ள முதன்மை வாசல் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் திரையிடப்பட்டன.

    பிரதமர் மோடி மே 3-ந்தேதி மேற்கு வங்காளத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு முன்பாக மே 2-ந்தேதி கவர்னர் மாளிகையில் தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு,
    • காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப்பட்டி, கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப்பட்டி, கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

    உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் நெல்லையில் இருந்தும் சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

    இந்நிலையில், இந்த ரெயில் இன்று 2.45 மணி நேரம் தாமதாக புறப்படும் என்று தென்னிந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆகவே இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று இரவு பயணம் மேற்கொள்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

    • ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக் உள்பட 23 வகை நாய் இனங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
    • இந்த வகை நாய்களை வைத்திருப்போர் உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

    சென்னையில் ஐந்து வயது சிறுமியை ராட்வீலர்ஸ் வகையைச் சேர்ந்த நாய்கள் கடித்து குதறியது. இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் தமிழக அரசு 23 வகை நாய் இனங்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் "ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக் உள்பட 23 வகை நாய் இனங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. கலப்பினங்கள் இறக்குமதி, இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்படுகிறது. இந்த வகை நாய்களை வைத்திருப்போர் உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 இடங்களிலும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

    சென்னை மாநகரில் வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் தற்போது அதனை தெரு நாய்களை போல வெளியில் சுற்றவிட்டு வருகிறார்கள். இது பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.

    இதை தொடர்ந்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

    சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதனை முழுமையாக கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

    சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை யால் சிறுமியை நாய்கள் கடித்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாகவும் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர். வளர்ப்பு நாய்களை முறையாக பரா மரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது, கழுத்தில் சங்கிலியால் கட்டி அதனை உரிமையாளர் கையில் பிடித்திருக்க வேண்டும். வாய் மூடியிருக்கும் வகையில் 'மசூல்' என்று அழைக்கப்படும் கவசத்தையும் கண்டிப்பாக நாயின் முகத்தில் அணிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு விதிகளை மீறி நாய்களை யாராவது தெருக்களில் திரியவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இது தொடர்பாக பொது மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×