என் மலர்
ஒடிசா
- ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்
- விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது
கடந்த வருடம் ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது அங்கு அரசியல் களத்தில் அதிகம் ஒலித்த பெயர் வி.கே. பாண்டியன். தமிழரான இவரை முன்வைத்தே பெரிய பிரச்சாரங்களை பாஜக முன்னெடுத்தது.
24 வருடங்களாக ஒரிசாவை ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள அரசு கடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைய முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.
ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார். பின் 2023 இல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.
"நவீன் பட்நாயக் அவரது அரசியல் வாரிசாக வி.கே. பாண்டியனை அறிவிப்பார், ஒடிசா ஒரு தமிழனின் கையில் சென்றுவிடும்" என்பதே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் ஒடிசா மக்களிடம் பதிய வைத்த பிம்பம். ஆனால் நவீன் பட்நாயக் அதை முற்றிலுமாக மறுத்தார்.

நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்து பாஜக கோட்டையை பிடித்த பின்னர், தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பாண்டியன் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது வி.கே. பாண்டியனின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர். கார்த்திகேயன், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
2000 பேட்ச் ஒடிசா கேடர் அதிகாரியான சுஜாதா, தற்போது அம்மாநில நிதித்துறையில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். தகவலின்படி, அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார்.
சர்ச்சை என்ன?
கடந்த வருடம் வரை மிஷன் சக்தி துறையில் ஆணையர் மற்றும் செயலாளராகப் பணியாற்றி வந்த சுஜாதா, மே 2024 இல், பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதன் காரணமாக சுஜாதாவை பொதுமக்கள் சாராத துறைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு, தேர்தலில் பிஜு ஜனதா தளம் தேர்தலில் தோல்வியடைந்ததால் 6 மாத விடுப்பு எடுத்தார் சுஜாதா. கடந்த வருடம் நவம்பர் 26 வரை அவர் விடுப்பில் இருந்தார்.
அதன்பிறகு விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது. இந்நிலையில் சுஜாதா விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளார்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- பிஜு ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா சட்டசபை இன்று கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதன்பின், சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்கள் மாநில அரசிடம் உத்தரவாதம் கோரினர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரண் தாஸ், சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
- அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஒடிசாவை சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, பல வருடங்களாக விளையாடுவதற்கு GROUND இல்லாமல் இருந்த கிராமத்து சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிங்கஜார், விளையாட்டுகளை விரும்பும் கிராமமாக மாநிலத்தில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும், கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
எனவே விளையாட தங்களுக்கென ஒரு மைதானம் இல்லாதது குறித்து குழந்தைகளின் ஏக்கத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வலரான 95 வயது மூதாட்டி சபித்ரி மாஜி, விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் ஒரு அரங்கம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

தனது முடிவு குறித்து பேசிய மூதாட்டி சபித்ரி மாஜி ''எங்கள் கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களுக்கு வழங்கிய விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார்.
முன்னதாக மூதாட்டி, கிராமத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபித்ரி மாஜியின் கணவர் நிலம்பர் மாஜி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
- தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுக்கிறது.
- பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சுகிறார்கள்.
ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினமும் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசின் தரவறிக்கை தெரிவிக்கிறது.
அரசு தரவுகளின்படி மட்டுமே, 2019 முதல் 2025, பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களை கொண்ட ஒடிசாவில் அதிகபட்சமாக நபரங்பூரில் 1,347 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன.
பழங்குடி பழக்கவழக்கங்கள், வரதட்சணை, தொழிலாள வர்க்க குடும்பங்களின் இடம்பெயர்வு மற்றும் தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுப்பதாக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
குழந்தை திருமணத்தைத் தடுக்க, ஒடிசா அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி மட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இது தவிர, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுக்களின் கூட்டங்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நடத்தி வருகிறது.
"குழந்தை திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும் . இவ்வகை திருமணங்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது" என்று சமூக ஆர்வலர் நம்ரதா சத்தா கூறுகிறார்.

வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு தொடர்ந்து புலம்பெயரும் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், புலம்பெயர்ந்த இடத்தில் அவள் யாருடனாவது ஓடிப்போய், குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். மேலும் பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சி இளவயதிலேயே அவர்களை திருமணம் செய்து தந்துவிடுகின்றனர்
இளவயது திருமணத்துடன், குழந்தைத் தொழிலாளர் முறையின் சவாலையும் ஒடிசா எதிர்கொள்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தொழிலாளர்களாக வேலை செய்த 328 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1986 இன் கீழ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது இதுவரை 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
- அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்டமாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதனை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு நவீன் பட்நாயகை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- இறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். அதில் குட் லக் டீம் இந்தியா என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
- பச்சை நிறத்தில் இருந்த பள்ளி சீருடைகள் ஏற்கனவே கலர் மாற்றப்பட்டுள்ளது.
- தற்போது பள்ளி கட்டிடங்களின் நிறங்களை மாற்ற பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசாவில் இரண்டு தசாப்தங்களாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வந்தது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 2000 முதல் 2024 வரை முதல்வராக இருந்தார். பிஜு ஜனதா தளம் கட்சியின் கொடி பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில் காட்சியளித்தன.
ஒடிசா மாநிலத்தில் அரசின் அதிகாரப்பூர்வ கட்டிங்கள் உள்பட அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில்தான் காட்சியளித்தன.
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதில் இருந்து பச்சை நிறம் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் சீருடை நிறம் பச்சையில் இருந்து லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறங்களுக்கு மாறியது.
இந்த நிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் அடர்ந்த ஆரஞ்ச் நிறம் (orange-tan) பார்டர் உடன் லைட் ஆரஞ்ச் நிறமாக மாற்ற வேண்டும் என ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணையம் (OSEPA) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதனால் பச்சை நிறமாக காட்சியளித்து வந்த அரசு பள்ளிக்கூடங்கள் இனிமேல் காவி நிறமாக காட்சியளிக்க இருக்கிறது.
பாஜக அரசின் இந்த முடிவு, கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.
- கடந்த 1-ந்தேதி அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்தது.
- குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.
ஒரு காலக்கட்டத்தில் உடல் உறுப்பு தானம் என்பது அரிதான நிகழ்வாக இருந்தது. ஆனால் தற்போது உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வால் பல பேர் மறுவாழ்வு பெற்று வருகின்றனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய தொடர்ந்து பலரும் முன் வருகின்றனர்.
இந்த நிலையில், 16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 16 மாத பெண் குழந்தையான ஜன்மேஷ் லென்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந்தேதி அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்ததையடுத்து மீளாதுயரத்தில் இருந்த குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவ குழு உடல் உறுப்பு தானம் குறித்து ஆலோசனை வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, மிகுந்த மன வலிமையுடனும், இரக்கத்துடனும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு கல்லீரலை அகற்றி டெல்லியில் உள்ள ILBS-க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அபாய கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
அதேபோன்று குழந்தையின் சிறுநீரகங்கள் புவனேஸ்வரியில் உள்ள AIIMS-BBS-ல் ஒரு நோயாளிக்கு என்-பிளாக் முறையில் பொருத்தப்பட்டன.
இதன்மூலம் 2 பேருக்கு புதிய வாழ்க்கையை ஒடிசாவின் இளைய உறுப்பு தானம் செய்பவரான 16 மாத குழந்தை ஜன்மேஷ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை முட்டையிடும்.
- ஒவ்வொரு ஆமையும் 50 முதல் 100 முட்டைகள் இடும்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கஹிர்மத் கடற்கரைக்கு 12 நாட்களில் சுமார் 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வந்துள்ளன. வரிசையாக ஆமைகள் குவிந்து கிடக்கின்றன.
இது அங்குள்ள பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ஜி.வி ஏ பிரசாத் கூறுகையில்:-
இந்த ஆமைகள் நிலவொளி இரவுகளில் முட்டையிட விரும்புகின்றன. அட்லாண்டிக் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து இங்கு வந்துள்ளன.
ஒவ்வொரு ஆமையும் 50 முதல் 100 முட்டைகள் இடும். அவற்றைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை முட்டையிடும் அதனால் கடற்கரையில் மீன்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இன்னும் லட்சம் ஆமைகள் வரக்கூடும் என்றார்.
- சட்டம் அதை மோசடி என்று கூறவில்லை.
- ஒரு ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள சப் இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார்.
இதனால் சப்-இன்ஸ்பெக்டர் திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த 2021 இல் போலீசில் புகார் அளித்தார். கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை மருந்துகளை அவர் தனக்கு கொடுத்ததாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவிதிர்ந்தார்.
இந்த வழக்கு ஒடிசா உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு முதல் உறவிலிருந்தனர். இருவரும் தங்கள் சம்மதத்துடன் ஒரு உறவில் நுழைந்தனர். ஆனால் இந்த உறவு திருமணமாக மாறவில்லை. அது தனிப்பட்ட குறைகளால் இருக்கலாம், ஆனால் காதல் தோல்வி ஒரு குற்றமல்ல. தனிப்பட்ட ஏமாற்றத்தை சட்டம் மோசடி என்று வரையறுக்கவில்லை என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மேலும், நமது சட்ட அமைப்பு மற்றும் அதை வடிவமைக்கும் சமூக உணர்வு இரண்டிலும், உடல் உறவு மற்றும் திருமண பந்தங்களை பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பெண்ணின் பாலியல் தேர்வு ஒரு ஆண் தரும் திருமண உறுதிப்பாட்டுடன் பிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உருவாக்குகிறது. திருமணம் என்பது ஒரு இலக்கு அல்ல. உறவையும் திருமணத்தையும் கலப்பது என்பது மனித உறவுகளைப் பழமையான எதிர்பார்ப்புகளில் சிறை வைப்பதாகும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
- இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம் என்று கூறி மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
- பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் செயல்பட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) பல்கலைக்கழகத்தில் நேபாள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் பலர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பிரகிருதி லம்சால் என்ற 20 வயது நேபாளை சேர்ந்த மாணவி பல்கலை. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கலிங்கா பல்கலையில் அவர் மூன்றாம் ஆண்டு பி.டெக் பயின்று வந்தார்.
அதே பல்கலையில் பயின்று வந்த லக்னோவை சேர்ந்த ஆத்விக் ஸ்ரீவஸ்தவா(21 வயது) என்பவரால் பிரகிருதி தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இவர் பிரகிருதியின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஆத்விக்கின் தொடர் தொந்தரவால் மன அழுத்தத்துக்கு ஆளான பிரகிருதி கடந்த மாதமே பல்கலை. மாணவர் மனநல ஆலோசகரிடம் தனது பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அதை அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அதீத மன அழுத்தம் காரணமாக பிரகிருதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட அதே நாளில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவா வெளியூருக்குத் தப்பியோட விமான டிக்கெட் எடுத்துள்ளதும் அம்பலமானது.

இதற்கிடையே பல்கலையில் பயின்று வந்த நேபாள் நாட்டை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த ஒரு மாதமாக, வளாகத்தில் ஒழுக்கமின்மை குறித்து புகார் அளித்து வந்தபோதும் யாரும் பதிலளிக்கவில்லை என்று அம்மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராடும் நேபாள் மாணவர்களை நிர்வாக அதிகாரிகள் தாக்குவதும், அவர்களை மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
அதில் பெண் ஆசிரியைகள் நேபாள் மாணவர்களை பார்த்து, "உங்களுக்கு ஆண்டு முழுக்க உணவுகளை இலவசமாகப் போடுகிறோம். அதன் விலை மட்டும் ரூ.40 ஆயிரம். இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம்" என்று கூறி அனைவரையும் உடனடியாக பல்கலையை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளனர். மேலும் பல்கலையில் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
நிர்வாகம் தங்களை வலுக்கட்டாயமாக வெளிற்றியுள்ளது என்றும் பயணச்சீட்டுகள் இன்றியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் சகோதரர் அழித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நேபாள் பிரதமர் சர்மா ஒலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் இரண்டு அதிகாரிகளை அனுப்பியது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஒடிசா பாஜக அரசு தலையிட்டு, மாணவர்களை வெளியே அனுப்பிய KIIT-ஐ அதன் முடிவை மாற்றுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து KIIT பல்கலைக்கழகம் நேபாள மாணவர்கள் திரும்பி வருமாறு வலியுறுத்தி ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது.
- முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இதனிடையே 2025 ஐபிஎல் கோப்பை ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் முன்பு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் கோப்பைக்கு கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.