search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalaignar Centenary Commemorative Coin"

    • கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
    • அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.

    சென்னை:

    திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

    * நாட்டு நடப்பு தெரிய வேண்டும் அல்லது இபிஎஸ்-க்கு மண்டையில் மூளையாவது இருக்க வேண்டும்.

    * ஏற்கனவே அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்களுக்கு வெளியிடப்பட்ட நாணயத்தை இபிஎஸ் பார்த்திருக்க மாட்டார்.

    * எல்லா தலைவர்களின் நாணயத்திலும் இந்தி தான் இடம் பெற்றிருக்கும்.

    * இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்.

    * அண்ணாவிற்கு வெளியிடப்பட்ட நாணயத்தில் அவர் தமிழ் கையெழுத்தை கலைஞர் இடம் பெற செய்தார்.

    * ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி உள்ளனரா?

    * இரங்கல் கூட்டம் நடத்தாத அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.

    * இபிஎஸ் போன்று ஊர்ந்து சென்று பதவி வாங்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது.

    * சங்கரை போல் எனக்கும் கோபம் வரும், ஆனால் கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்

    * அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன், நமக்கென்று இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

    • கலைஞரை இந்த அளவுக்கு புகழ வேண்டும், பாராட்டி பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.
    • கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு.

    சென்னை:

    திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமியின் சகோதரர் திருவொற்றியூர் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்து மணமக்கள் திலீபன்-விஷாலியை வாழ்த்தினார்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

    உள்ளபடியே கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினால் என்ன பேசுவார்களோ அதை விட அதிகமாக, தி.மு.க.காரன் பேசுவதை விட அதிகமாக சிறப்பாக தலைவர் கலைஞரை பற்றி அவர் பேசியது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்க தக்க உரையாக அந்த உரை அமைந்தது.

    கலைஞரை இந்த அளவுக்கு புகழ வேண்டும், பாராட்டி பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. தேவையும் இல்லை அவருக்கு. ஆனாலும் பேசினார் என்றால், உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார்.

    இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று ஒரு பேட்டி கொடுக்கிறார்.

    நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது, தமிழில் இல்லை. தமிழ், தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார்.

    முதலில் ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும். இல்லை நாட்டினுடைய நடப்பு புரிந்திருக்க வேண்டும்.

    அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால் மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக நடைபெறுகிற நிகழ்ச்சி அது.

    ஏற்கனவே பல பேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை அவர் பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். எல்லா தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது, ஒன்றிய அரசு இந்தியில்தான் எழுதி அப்புறம் ஆங்கிலத்தில் எழுத்துகள் அமைந்திருக்கும்.

    ஆனால் அண்ணாவுக்கு நாணயம் வெளியிடுகிறபோது தலைவர் கலைஞர் யாரும் செய்யாத ஒரு ரகசியத்தை செய்தார். அண்ணாவுடைய தமிழ் கையெழுத்து அதில் இடம் பெற வேண்டும் என்று சொல்லி அண்ணாவின் தமிழ் கையெழுத்தை அந்த நாணயத்தில் வெளியிட்டு அதற்கு பிறகு வெளியிடப்பட்டது.

    அது மாதிரிதான் கலைஞரின் நாணயத்தை வெளியிடுகிறபோது கலைஞருக்கு ரொம்ப பிடித்த எழுத்து, தமிழ் வெல்லும். ஆக அந்த 'தமிழ் வெல்லும்' என்பது தமிழில்தான் எழுதப்பட்டு உள்ளது. இதை கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது வருத்தமாக உள்ளது.

    ஏன் ராகுல்காந்தியை அழைக்கவில்லை என அவர் கேட்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை தி.மு.க. நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் நிகழ்ச்சி நடந்தது.

    கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. அதனால்தான் ஒன்றிய அமைச்சரை அழைத்து அந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.

    இதில் எங்கே பழனிசாமிக்கு வலிக்கிறது? அதைத்தான் நான் கேட்கிறேன்.

    எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டார்கள். யார் வெளியிட்டார்கள் தெரியுமா? ஒன்றியத்தில் இருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால் ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. அவரை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. ஏன் மனுஷனாகவே நினைக்கவில்லை. வர மறுத்து விட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை.

    இன்றைக்கு நாம் அழைத்தவுடன் அடுத்த வினாடி ஒரு சொல் கூட தட்டாமல் ஒரு 15 நிமிடம், அரைமணி நேரம் வந்து நீங்கள் நடத்தி விட்டு செல்லுங்கள் என்றோம்.

    15 நிமிடம் என்ன... எவ்வளவு மணி நேரம் என்றாலும் இருந்து காத்திருந்து நிகழ்ச்சியை நடத்தி விட்டு போகிறேன் என்று சொல்லி விட்டு வந்தார். அதுதான் தி.மு.க.வுக்கு இருக்கக்கூடிய பெருமை. கலைஞருக்கு இருக்க கூடிய சிறப்பு.

    இன்னொன்றும் சொல்ல வேண்டும், அம்மா, அம்மா என்று புகழ்ந்து கொண்டி ருக்கிறார்களே அ.தி.மு.க.வினர். பாக்கெட்டில் படத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்களே அந்த அம்மையார் இறந்து எத்தனை வருடம் ஆகி விட்டது.

    நான் கேட்கிறேன். இதுவரைக்கும் அந்த அம்மையரால் வளர்க்கப்பட்டவர்கள் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி இருக்கிறார்களா?

    ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்துவதற்கு யோக்கியதையற்றவர்கள் கலைஞருடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.

    ராஜ்நாத்சிங்கை நாம் அழைத்ததால் ஏதோ பா.ஜ.க.வுடன் நாம் உறவு வைத்துக் கொண்டோம். உறவு வைக்க போகிறோம். அப்படின்னு ஒரு செய்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

    இது மீடியாவுக்கு ஒரு தீனி. ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திட்டினாலும் தி.மு.க.தான், வாழ்த்தினாலும் தி.மு.க.தான்.

    நாங்கள் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அம்மையார் இந்திரா காந்தியே சொன்னார். கலைஞரை பொறுத்தவரைக்கும், தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார். ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று சொல்லி இருக்கிறார். அது போதும் எங்களுக்கு.

    மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கூட நாங்கள் தீர்மானம் போட்டுள்ளோம். முதலில் எடிப்பாடி பழனிசாமி அதை படிக்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி மாதிரி ஊர்ந்து போய், பதுங்கி போய் பதவி வாங்குகிற புத்தி தி.மு.க.வுக்கு கிடையாது. எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுக்கிறோம்.

    அதற்காக நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன். அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன். நமக்கென்று இருக்க கூடிய உரிமையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதுதான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு நமக்கு போட்டுத் தந்திருக்கும் பாதை.

    அப்படிப்பட்ட இயக்கத்தை சேர்ந்த குடும்பத்தில்தான் இன்றைக்கு இந்த மண விழா நடக்கிறது.

    இங்கே உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது, சங்கருக்கு கோபம் வந்திடும். அந்த பயத்திலேயே வந்தேன் என்று சொன்னார். நானும் அப்படித்தான்.

    ஒன்றை மறந்து விடக்கூடாது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். கட்சிக்கென்று ஒரு பிரச்சினை வருகிறபோது பெரிய கோபம் வந்தே தீர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு, காந்தி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர் எம். எல்.ஏ., கலாநிதி வீராசாமி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜே. எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி மாநில மீனவர் அணி தலைவர் இரா. பெர்ணார்டு, மீனவர் அணி நிர்வாகிகள் மதிவாணன், ஜோசப் ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் தி.மு. தனியரசு, வை. ம. அருள்தாசன், ஏ.வி. ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி. அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், ஆகாஷ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்வ ராஜகுமார், ராமநாதன், இரா. முருகேசன்,அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன் பரசு பிரபாகரன், பி. எஸ். இனியன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக கே.பி.சொக்கலிங்கம் வரவேற்றார். முடிவில் கே.பி.சங்கர் எம்.எல். ஏ. நன்றி கூறினார்.

    • கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
    • அப்போது பேசிய அவர், கலைஞர் கருணாநிதியின் போராட்டங்கள் மிகவும் வலிமையானவை என்றார்.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலைஞர் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் கலைஞர்.

    தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தித்து துணை நின்றவர்.

    கலைஞர் கருணாநிதியின் போராட்டங்கள் மிகவும் வலிமையானவை.

    மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர்.

    மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்.

    ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்களைக் கொண்டு வந்தவர் கலைஞர்.

    தமிழ் இலக்கியம், சினிமாவிற்கு கலைஞர் அளித்த பங்கேற்பு மிகவும் அபரிமிதமானது.

    இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர் என தெரிவித்தார்.

    • பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே, முதல் தேர்வாக இருந்தார்.
    • கலைஞரை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.

    அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்று இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலவேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்த கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரே வந்திருப்பது மிக மிக மிக பொருத்தமானது.

    பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே, முதல் தேர்வாக இருந்தார். அனைத்து கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் நாணயம் வெளியிடப் பொருத்தமானவர்

    'நா-நயம் மிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது, நாம் கொண்டாடிய கலைஞரை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா.

    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

    • மெரினாவில் கருணாநிதி நினைவிடம் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    • விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.

    அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்று இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

    ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு கலைவாணர் அரங்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முன்னதாக, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • மெரினாவில் கருணாநிதியின் நினைவிடம் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
    • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் 100 நாணயத்தை வெளியிட உள்ளார்.

    சென்னை:

    தமிழின தலைவர், கலைஞர் என அழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஆவார். 13 முறை எம்.எல்.ஏ.வாகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்து உள்ளார்.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி முதல் ஓராண்டு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது.

    பல்வேறு காரணங்களால் நாணய வெளியீட்டு விழா தள்ளிப்போன நிலையில், இன்று மாலை அதற்கான விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

    இதற்கிடையே, இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு சென்றார். அங்கு கடலோர காவல்படைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

    அதன்பின், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங், கருணாநிதியின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார்.

    • முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
    • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இரவு நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். மாலையில் நடைபெற உள்ள விழாவில் கலைஞர் நாணயத்தை வெளியிட உள்ளார்.

    • முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா காரணமாக போக்குவரத்து மாற்றம்.
    • நாணய வெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

    முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.

    இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தயில், "கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக நடைபெறும் இந்நிகழ்ச்சி முக்கியமானது.

    இந்திய அரசியல், இலக்கியம், சமுதாயத்தில் உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக கருணாநிதி திகழ்ந்தார்.

    அரசியல் தலைவராக முதலமைச்சராக கருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார். மக்களால் முதலமைச்சராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி மக்கள், கொள்கை, அரசியலை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.

    கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில் அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவுகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் கருணாநிதிக்கு எனது இயதப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
    • இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. இந்த விழா தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இதன் காரணமாக விழா நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து மாற்றம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    அதன்படி, "18.08.2024 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    1. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை. நேப்பியர் பாலம், வாலாஜா சாலை. அண்ணா சாலை மற்றும் கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    2. மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.

    3. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்துசெல்லுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    4. பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை, தீவுதிடல் மைதானம், PWD மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.

    5. பெரியார் சிலை. சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.

    6. வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 1000 மணி முதல் 1600 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.

    7. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாகவும் மற்றும் VVIP-கள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

    8. தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    9. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர்சாலை மற்றும் வாலாஜாசாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×