என் மலர்
நீங்கள் தேடியது "New classroom"
- அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொல்லிக் காளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சேமிப்பு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கொடி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ், துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பள்ளி கட்டிடத்தை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியம், சிவாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பில் கட்டப்பட உள்ள இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி, ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி,மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டி, கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்த பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 447 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஒன்றிய கவுன்சிலர் (எஸ்.டி.பி.ஐ.) பைரோஸ் கான் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கல்வி மாவட்டம் திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலகம் கட்டுப்பாட்டில் செயல்படும் பெரியபட்டினம் சேகு ஜமாலுதீன் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 3 ஏக்கர் பரப்பளவில் 1960-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 447 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3 ஒட்டு கட்டிடத்திலும், ஒரு கான்கிரீட் கட்டித்திலும், மொத்தம் 4 கட்டிடத்தில் 8 வகுப்பறைகள் உள்ளன, இதில் 1 வகுப்பறை அலுவலகமாக செயல்படுகிறது.
7 வகுப்பறைகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.1-ம் வகுப்பில் 85 குழந்தைகளும், 2-ம் வகுப்பில் 101, 3-ம் வகுப்பில் 101, 4-ம் வகுப்பில் 85, 5-ம் வகுப்பில் 75 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வகுப்பும் 2 பிரிவுகளாக்கப்பட்டு 10 வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 7 வகுப்புகள் வகுப்பறை அறைகளுக்குள்ளும், மற்ற 3 வகுப்புகள் பள்ளி நடைபாதையிலும் நடைபெற்று வருகிறது.
இந்த பள்ளியில் அரசு வழிகாட்டுதலின்படி தலைமையாசிரியர் உள்பட 13 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தலைமையாசிரியர் உள்பட 6 ஆசிரியர்களும் 3 மாற்றுப்பணி ஆசிரி யர்களும் மொத்தம் 9 ஆசியர்கள் பணியில் உள்ளனர். இன்னும் 4 ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும். கூடுதலாக 4 வகுப்பறைகள் தேவைப்படுகிறது.
இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி முதல்-அமைச்சர், பள்ளி கல்விதுறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்விதுறை இயக்குநர், கலெக்டர் மற்றும் மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மாணவர்கள் நலன் கருதி பெரியபட்டினம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு உடனடியாக 2 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடம் கட்டவும், கூடுதலாக 4 ஆசிரியர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.






