என் மலர்
நீங்கள் தேடியது "Parliament"
- பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலால் டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது.
அதன்படி நடப்பு ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய பாராளுமன்றத்திற்கான கட்டட பணிகள் இன்னும் நிறைவடையாததால், இந்த ஆண்டும் வழக்கம் போல் பாரம்பரிய பாராளுமன்ற கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிகிறது.
- செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
- ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.
வாஷிங்டன்
அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.
இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட்சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.
- தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
- சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் சாதகமாக உள்ளது.
புதுடெல்லி :
வருகிற 7-ந் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இந்த குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று காலை உயர்மட்டக்கூட்டம் ஒன்றைக்கூட்டினார்.
கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் உத்திகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
இதையொட்டி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 முக்கிய பிரச்சினைகளை எழுப்புவோம்.
இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுதல் ஆகிய பிரச்சினைகளை எழுப்புவோம்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் சாதகமாக உள்ளது. இதைச் செய்து முடிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் 2 நீதிபதிகள் இட ஒதுக்கீடக்கு எதிராக கேள்விகள் எழுப்பினர். இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிசம்பர் 29-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
- மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
புதுடெல்லி :
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார்.
தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அத்துடன், பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, இன்று மாலை, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை நடத்துகிறார். எந்தெந்த பிரச்சினைகள் மீது விவாதம் நடத்துவது என்று இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
- மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும்.
இந்தத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
- குளிர்கால கூட்டத்தொடரை பயனுள்ளதாக மாற்ற, எம்.பி.க்கள் உதவ வேண்டும்.
- இந்த அமர்வில் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நான் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தபோது, அவர்கள் சொன்னார்கள், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு ஒத்தி வைக்கப்படும் போது அது புதிய எம்.பி.க்களை பாதிக்கிறது.
அவை நடவடிக்கைகள் தொடராத போதும், விவாதங்கள் நடைபெறாத போதும் கற்றுக் கொள்வதும், புரிந்து கொள்வதும் இயலாமல் போய் விடுகிறது. அதனால்தான் அவை செயல்படுவது மிகவும் முக்கியமானது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட தங்களை விவாதத்தில் பேச விடுவதில்லை என்று புதிய எம்.பி.க்கள் சொல்கிறார்கள்.
அவர்களது வலியை புரிந்து கொள்ளுங்கள். அனைத்துத் கட்சித் தலைவர்களும் இதை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இந்த அமர்வில் ஒன்றிணைந்து செயல்படுமாறு அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பிரதமர் மோடிக்கு நியமன எம்.பி., பி.டி.உஷா நன்றி தெரிவித்தார்.
- ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரதமர் அக்கறை காட்டுவதாக பேச்சு.
பாராளுமன்ற மாநிலங்களையில் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளதாவது: நாட்டில் தற்போது ஒ புதிய பாரம்பரியம் நிறுவப்படுகிறது, சாதாரண பின்னணியில் பிறந்து, சாதாரண வாழ்க்கை நடத்துவோர் இப்போது உயர் பதவிகளில் உள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரு ஆசிரியர், ஒடிசாவின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய பள்ளியில் பணியாற்றிய அவர் இப்போது குடியரசுத் தலைவர்.
மாநிலங்களவைத் தலைவர் ஒரு விவசாயியின் மகன், தற்போது எங்களது குடியரசு துணைத் தலைவர். நமது பிரதமர் டீ விற்பவர் வீட்டில் பிறந்தவர், சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றார், அதைச் செய்து கொண்டே படித்தார். அவர் தனது வாழ்நாளின் 5 தசாப்தங்களுக்கும் மேலாக சமூகம் மற்றும் இந்த தேசத்தின் சேவைக்காக பாடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக நியமன எம்.பி. பி.டி.உஷா மாநிலங்களவையில் பேசுகையில் கூறியுள்ளதாவது: ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த மக்கள் மீதான அக்கறைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது தேசத்துக்குக் கிடைத்த பெருமை. பழங்குடியின சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய கவுரவம். ஒரு விவசாயியின் மகன் இப்போது துணை ஜனாதிபதி, இது ஒரு புதிய இந்தியா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
- இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்தார். அவர் பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 31 வீரர்கள் பணியின்போது உயிரிழந்து உள்ளனர். பொதுமக்கள் தரப்பிலும் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பெரிய அளவில் குறைந்துள்ளன. 2018-ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 417 ஆக இருந்தது. இது, 2021-ம் ஆண்டில் 229 ஆக குறைந்தது. 2022-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 3 காஷ்மீரி பண்டிட்டுகள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் 14 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராணுவத்தில் பெண்களுக்கான பதவி எதுவும் காலியாக இல்லை.
- கடற்படை மற்றும் விமானப்படையில் பாலின சமத்துவ அடிப்படையில் பணி நியமனம்
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முப்படைகளில் பெண்களை ஈடுபடுத்துவதில் சீரான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான பதவி எதுவும் காலியாக இல்லை. இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படையில் அனுமதிக்கப்பட்ட பதவிகள் அனைத்தும் பாலின சமத்துவ அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம்.
- இணைய தளத்தை பயன்படுத்துபவர், சமூக ஊடகக் கணக்குகள் சரிபார்ப்பு கட்டாயமாகும்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அதே வேளையில், பொறுப்பற்ற முறையில் பொதுத்தளத்தில் சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதனை உறுதிசெய்வதற்கு தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான நம்பத்தகுந்த சமூக ஊடகக் கணக்குகள் இருக்க வேண்டும் என்பதில் அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதற்கு செயலாக்கம் தரும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கொண்டு வரப்பட்டது.
அதன்படி, பகிரப்படும் தகவல்கள் அறிந்தோ, அறியாமலோ, தகவல்களை பெறுபவர்களை ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, மாற்றவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோக் கூடாது. பொய்யான, தவறாக வழிநடத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.
மேற்கூறியவற்றை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசு அல்லது அதன் அமைப்பு ரீதியிலான புகார் அல்லது நீதிமன்ற உத்தரவு அல்லது நோட்டீஸ் பெறப்பட்டதன் பேரில், தானாக முன்வந்து, தகவல்களை பகிரவோ, சேமிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது. அவதூறு, பொது மக்கள் நலன், கண்ணியம், ஒழுக்கம், மீறப்படும் போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மெய்ன் புரி எம்.பி. தொகுதி இடைத் தேர்தல் நடந்தது.
- முலாயம் சிங்கின் மருமகள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் மறைவையொட்டி மெய்ன் புரி எம்.பி. தொகுதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங்கின் மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர் 6,17,625 வாக்குகளை பெற்று பா.ஜனதா வேட்பாளர் ரகுராஜ் சிங்கை 2,88,136 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது இன்று டிம்பிள் யாதவ் எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் நடை பெறுகின்றன.
- ரூ.46.24 கோடியில் தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டுப் பணி நடைபெறுகிறது.
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி கே சிங் கூறியுள்ளதாவது:
விமானப் போக்குவரத்து வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
கடந்த 7 வருடங்களில் குஜராத்தில் தொலேரா, ஹிராசர், ஆந்திரப் பிரதேசத்தில் தாகதர்த்தி, போகபுரம், ஒரவக்கல், அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகரில் உள்ள டோன்யி போலோ ஆகிய பகுதிகளில் பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ஒரவக்கல் மற்றும் டோன்யி போலோ விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையக் கட்டிடக் கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக 146 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 1125.91 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் 710.35 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் 46.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.