search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty Race Course"

    • மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.
    • மெட்ராஸ் கிளப் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே குதிரை பந்தய மைதானம் உள்ளது. சுமார் 52.34 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் குத்தகை பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன்வரவில்லை. அத்துடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குத்தகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும், செலுத்தாத பட்சத்தில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் (ஜூன்) 24-ம்தேதி உத்தரவிட்டது. அதன்பிறகும் குத்தகை தொகையான சுமார் ரூ.822 கோடியை அரசுக்கு செலுத்தாமல் இருந்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்தனர்.

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மெட்ராஸ் கிளப் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ் வி என் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, குதிரை பந்தயம் மைதானத்திற்கு சீல் வைத்தது செல்லும் என தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது

    • கடந்த 1879-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 1978-ம் ஆண்டு முடிந்து விட்டது.
    • . தற்போது வரை 23 ஆண்டுகளாக குத்தகையை புதுப்பிக்காமலும், குத்தகை தொகையை வழங்காமலும் இழுத்தடித்து வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே குதிரை பந்தய மைதானம் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.

    சுமார் 52.34 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 1879-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 1978-ம் ஆண்டு முடிந்து விட்டது. மீண்டும் 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை குத்தகை தொகையை ரேஸ் கிளப் நிர்வாகம் முறையாக செலுத்தி வந்தது.

    இதற்கிடையே 2001-ம் ஆண்டு முதல் குத்தகை தொகை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை தொகையை வழங்கவில்லை. தற்போது வரை 23 ஆண்டுகளாக குத்தகையை புதுப்பிக்காமலும், குத்தகை தொகையை வழங்காமலும் இழுத்தடித்து வந்தது.

    இதனால் ரூ.822 கோடி குத்தகை தொகை பாக்கி இருந்தது. இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் குத்தகை பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன்வரவில்லை. அத்துடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குத்தகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும், செலுத்தாத பட்சத்தில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது.

    அதன்பிறகும் குத்தகை தொகையான சுமார் ரூ.822 கோடியை அரசுக்கு செலுத்தாமல் இருந்ததால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஊட்டி ஆர்.டி.ஓ. மகாராஜ், சரவணகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அறிவிப்பு பலகை வைத்து, நிலத்தை கையகப்படுத்தினர்.

    ×