search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purchase of country charcuterie"

    • விவசாயிகள் 1,445 மூட்டை கள் நாட்டுச் சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.29 லட்சத்து 98 ஆயிரத்து 35-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை

    விற்பனைக்கூடத்தில் இருந்து நாட்டுச்சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,445 மூட்டை கள் நாட்டுச் சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 60 கிலோ எடையிலான மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2,600-க்கும், அதிகபட்சமாக ரூ.2,615-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக மூட்டை ரூ.2,430 -க்கும், அதிகபட்சமாக ரூ. 2,530-க்கும் விற்பனையானது.

    இதில் மொத்தம் 70 ஆயிரத்து 800 கிலோ எடையிலான 1,180 நாட்டுச்சர்க்கரை மூட்டை கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 98 ஆயிரத்து 35-க்கு கொள்முதல் செய்ய ப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×