என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sangameswarar temple"

    • கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
    • சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனாய சங்கமேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஒரு சமயம் அசுரன் ஒருவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, சாகா வரம் பெற்றான். தேவலோகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை கொண்ட அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் அவர்களிடம், சிவபெருமானை வேண்டும்படி கூறினார். அதன்படி, சங்கு புஷ்பங்கள் நிறைந்த இப்பகுதியில் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அசுரனை அழிக்குமாறு வேண்டினர். அதன்பின், சிவபெருமான் அசுரனை வதம் செய்ததாக கூறப்படுகிறது.

    சிவபக்தனான கரிகால் சோழ மன்னன், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு வந்தான். ஒரு நாள், சிவன் அற்புதம் செய்த தலங்களில் சிவாலயங்கள் கட்டுவதாக கனவு கண்டான். இது குறித்து தனது குருவிடமும், ஆன்றோரிடமும் ஆலோசனைக் கேட்டான். அதன்படி, சிவன் அற்புதம் செய்த இடங்களில் கோவில்களை எழுப்பினான். அவ்வாறு அவன் கட்டிய சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, இறைவன் நம் தலைவிதியை மாற்றும் வல்லமை உள்ளவர் என்பதை குறிப்பதாக உள்ளது. மரணத்தருவாயில் உள்ள இளைஞர்கள் இங்கு வந்து வழிபட்டால், அவர்களது தலைவிதி மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கோவில் சுற்றுப் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரிய பகவான், காப்பு விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். 63 நாயன்மார்களின் திருவுருவ சிலைகளும் உள்ளன. ஒரு தூணில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    மூலவர் மற்றும் அம்பாளின் சன்னிதிக்கு இடையில் சோமாஸ்கந்தராக உள்ள முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காணப்படுகிறார். இவரது ஆறு முகங்களும் நேராக நோக்கிய நிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களை தாங்கியபடி காட்சி தருகிறார். கோவில் அமைப்பை பார்க்கும்போது, முருகனே மூலவராக அருள்பாலிக்கும் வகையில் உள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.‌
    • இதில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி மற்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழா க்கள் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்திட வசதிக்காக ராஜ கோபுரம், பெருமாள் சன்னதி, பசு பராமரிப்பு, அன்னதானம், சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணடியல்களில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

    இந்த உண்டி யல்கள் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்கள், தன்னார்வ லர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் காணிக்கைகள் எண்ணப் படுவது வழக்கம்.

    அதேபோல் பெருமாள் கோவில் சன்னதியில் இந்து அறநிலையத்துறை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதில் ரூ.27 லட்சத்து 33 ஆயிரத்து 842 பணம் மற்றும் 35 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • சனீஸ்வரபகவானுக்கு சனி பெயர்ச்சி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் சனீஸ்வர பகவானுக்கு என்று ஒரு தனி சன்னதி உள்ளது.

    அங்கு அமைந்துள்ள சனீஸ்வர பகவானுக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மதியம் 1.06 நிமிடத்திற்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    இதில் பவானி, குமாரபாளையம், லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறிய நிலையில் வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மதியம் 1.06 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி இடம் பெயர்ந்ததை தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு இந்த சனி பெயர்ச்சி விழா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 

    • ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடந்தது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 26 -ந் தேதி சங்கமேஸ்வரர் சன்னதி முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ந் தேதி வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப்பெருமாள் மற்றும் 63 நாயன்மார்கள் உட்பட பல்வேறு சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து இரவு விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் கருட வாகனத்திலும், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.

    விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலை ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பவானி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாயுடுமார்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ. நாகராசன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், சங்கமேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சுவாமிநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

    விழா நாட்களில் அம்பாள் கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி விருஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    9-ம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு பாகம்பிரியாள் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து காலை 10.20 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் ரதவீதிகள் வழியாக சென்று நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தேரோட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மஞ்சள் இடித்தல் (திருப்பொற்சுண்ணம்), 10 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள், சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. 9.30 மணிக்கு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது. 
    ×