search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seat reservation"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன.
    • அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அப்போது தான் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் குறைந்த கட்டணத்தில் சேர முடியும்.

    கடந்த சில வருடங்களை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் அதிக மதிப்பெண் பெற்ற னர். அகில இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் தமிழக மாண வர்கள் 8 பேர் இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும். 720க்கு 720 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் 600க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டு 1538 பேர் மட்டும் எடுத்து இருந்தனர். அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும் என்று மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் தெரிவித்தார்.

    நீட் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் புதிய மருத்துவ கல்லூரி அல்லது தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படாததால் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடினமான சுழல் இந்த வருடம் நிலவக்கூடும்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ள 3 சுயநிதி நிறு வனங்கள் உள்பட 5 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் நிலுவையில் உள்ளன.

    புதிதாக மருத்துவ இடங்கள் அதிகரிக்காததால் கடந்த வரும் இருந்த அதே இடங்களுக்கு அதிகளவில் மதிப்பெண் குவித்தவர்கள் எண்ணிக்கை கூடி உள்ள தால் கட்-ஆப் மதிப் பெண் உயருகிறது. இது மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடினமான நிலையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

    செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப் பட்ட 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக 400 இடங்கள் கிடைத்து இருந்தால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

    கூடுதலாக இடங்கள் வந்திருந்தால் கட்-ஆப் மதிப்பெண் குறைந்திருக்கும். ஆனால் அதற்கு இந்த ஆண்டு வாய்பப்பு இல்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்த வருடம் மருத்துவ இடங்களுக்கு கடுமையான போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.

    • அனைத்து மீனவ சங்கம் தீர்மானம்
    • இது மத்திய அரசு இடஒதிக்கீட்டின் வழிக்காட்டு முறைப்படியே அமைத்துள்ளது, இதனால் இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வழியில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை செல்வராசு செட்டியார் வளாகத்தில், அனைத்து மீனவ சங்கங்களின் கூட்ட மைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்தில் வழிகாட்டு குழு உறுப்பினர்கள் பச்சையப்பன், குமார், செல்வநாத், உத்திராடம், பாஸ்கரன், வேலு, வடிவேல், கதிரவன், ஜெயவீரன், தலைவர் குமரன், பொதுச் செயலாளர் பெரியாண்டி, பொருளாளர் தேவநாதன், அவைத் தலைவர் ஆறுமுகம், அமைப்பாளர் வெங்கடேசப்பெருமாள், துணைத் தலைவர் மூர்த்தி, இணைப் பொதுச் செயலாளர் நிர்வாகிகள் நடராஜன், அன்பரசன், வேலுமணி, சிவராமன், கனகராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் புதுவை மற்றும் காரைக்கால் மீனவர்களுக்கு ஈ.பி.சி அதாவது மிக மிக பின்தங்கிய பிரிவினர் என்ற பெயரில் 2 சதவீத இடஒதிக்கீடு புதுவை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    இது எம்.பி.சி மிகவும் பின்தங்கியவர் பிரிவில் இருந்து உள்ஓதிக்கீடாக பிரித்து கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கும் போது, சரியான மக்கள் தொகை கணக்கெடுத்து மக்கள் தொகைக்கேற்ப பின்னர் இந்த ஒதுக்கீடு உயர்த்திக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பெயரில் கொடுக்கப்பட்டது.

    அதே வாக்குறுதியை தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இது உயர்த்தப் படாமலே உள்ளது. எனவே இந்த 2 சதவீத குறைந்த ஒதுக்கீட்டினால் பாதிக்கப் படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

    எம்.பி.சியிலே இருந்தி ருந்தால் நாம் பாதிப்படைந்து இருக்க மாட்டோம். அரசாங்கம் நம்மை வஞ்சித்து விட்டது என்று மீனவமக்கள் கருதத் தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் இந்த 2 சதவீதம் ஈ.பி.சி ஓதுக்கீடு எங்களுக்கு வேண்டாம். எங்களை மறுபடியும்

    எம்.பி.சியிலேயே சேர்த்து விடுங்கள் என்று காரைக்கால் மீனவர்கள் அனைவரும் தீர்மானித் துள்ளனர், இதுகுறித்து முன்னாள் எம்.பி. ராமதாஸ் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    புதுவை மீனவர்களி டையேயும் இத்தகைய அதிருப்தியும் எதிர்ப்பும் அதிகரித்த வண்ணமாய் உள்ளதால், அனைத்து மீனவ இயக்கங்களின் கூட்ட மைப்பின் செயற்குழு அரசுக்கு கீழ்காணும் கோரிக்கைகளை முன் வைக்கிறது.

    உடனடியாக ஈ.பி.சி இடஒதுக்கீட்டின் அளவை 5 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மீனவர்கள் இருக்கிறார்கள். மாநிலத்தின் 3-வது பெரிய சமுதாயம் மீனவ சமுதாயம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அதில் 50 விழுக்காடு 5 சதவீதமாக இருப்பதால், இது மத்திய அரசு இடஒதிக்கீட்டின் வழிக்காட்டு முறைப்படியே அமைத்துள்ளது, இதனால் இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வழியில்லை.

    2-வது, ஒருவேளை 2 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றால், ஈ.பி.சி ஒதுக்கீட்டை எம்.பி.சி பிரிவுக்குள்ளே கிடைமட்ட ஒதுக்கீடாக வைக்க வேண்டும். அதாவது ஏ.பி.சி ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்களுக்கு

    எம்.பி.சியில் இடம் கிடைக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×