search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்
    X

    அனைத்து மீனவ சங்க கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள்.

    இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்

    • அனைத்து மீனவ சங்கம் தீர்மானம்
    • இது மத்திய அரசு இடஒதிக்கீட்டின் வழிக்காட்டு முறைப்படியே அமைத்துள்ளது, இதனால் இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வழியில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலை செல்வராசு செட்டியார் வளாகத்தில், அனைத்து மீனவ சங்கங்களின் கூட்ட மைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்தில் வழிகாட்டு குழு உறுப்பினர்கள் பச்சையப்பன், குமார், செல்வநாத், உத்திராடம், பாஸ்கரன், வேலு, வடிவேல், கதிரவன், ஜெயவீரன், தலைவர் குமரன், பொதுச் செயலாளர் பெரியாண்டி, பொருளாளர் தேவநாதன், அவைத் தலைவர் ஆறுமுகம், அமைப்பாளர் வெங்கடேசப்பெருமாள், துணைத் தலைவர் மூர்த்தி, இணைப் பொதுச் செயலாளர் நிர்வாகிகள் நடராஜன், அன்பரசன், வேலுமணி, சிவராமன், கனகராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் புதுவை மற்றும் காரைக்கால் மீனவர்களுக்கு ஈ.பி.சி அதாவது மிக மிக பின்தங்கிய பிரிவினர் என்ற பெயரில் 2 சதவீத இடஒதிக்கீடு புதுவை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    இது எம்.பி.சி மிகவும் பின்தங்கியவர் பிரிவில் இருந்து உள்ஓதிக்கீடாக பிரித்து கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கும் போது, சரியான மக்கள் தொகை கணக்கெடுத்து மக்கள் தொகைக்கேற்ப பின்னர் இந்த ஒதுக்கீடு உயர்த்திக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பெயரில் கொடுக்கப்பட்டது.

    அதே வாக்குறுதியை தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இது உயர்த்தப் படாமலே உள்ளது. எனவே இந்த 2 சதவீத குறைந்த ஒதுக்கீட்டினால் பாதிக்கப் படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

    எம்.பி.சியிலே இருந்தி ருந்தால் நாம் பாதிப்படைந்து இருக்க மாட்டோம். அரசாங்கம் நம்மை வஞ்சித்து விட்டது என்று மீனவமக்கள் கருதத் தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் இந்த 2 சதவீதம் ஈ.பி.சி ஓதுக்கீடு எங்களுக்கு வேண்டாம். எங்களை மறுபடியும்

    எம்.பி.சியிலேயே சேர்த்து விடுங்கள் என்று காரைக்கால் மீனவர்கள் அனைவரும் தீர்மானித் துள்ளனர், இதுகுறித்து முன்னாள் எம்.பி. ராமதாஸ் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    புதுவை மீனவர்களி டையேயும் இத்தகைய அதிருப்தியும் எதிர்ப்பும் அதிகரித்த வண்ணமாய் உள்ளதால், அனைத்து மீனவ இயக்கங்களின் கூட்ட மைப்பின் செயற்குழு அரசுக்கு கீழ்காணும் கோரிக்கைகளை முன் வைக்கிறது.

    உடனடியாக ஈ.பி.சி இடஒதுக்கீட்டின் அளவை 5 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மீனவர்கள் இருக்கிறார்கள். மாநிலத்தின் 3-வது பெரிய சமுதாயம் மீனவ சமுதாயம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அதில் 50 விழுக்காடு 5 சதவீதமாக இருப்பதால், இது மத்திய அரசு இடஒதிக்கீட்டின் வழிக்காட்டு முறைப்படியே அமைத்துள்ளது, இதனால் இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வழியில்லை.

    2-வது, ஒருவேளை 2 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றால், ஈ.பி.சி ஒதுக்கீட்டை எம்.பி.சி பிரிவுக்குள்ளே கிடைமட்ட ஒதுக்கீடாக வைக்க வேண்டும். அதாவது ஏ.பி.சி ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்களுக்கு

    எம்.பி.சியில் இடம் கிடைக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×