என் மலர்
நீங்கள் தேடியது "Sexual harassed"
- மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கவரிங் செயின் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது
நெல்லை:
மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள கவரிங் செயின் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது மேலப்பளையம் பீடி காலனி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 19) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரணை நடத்தி சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






