என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை பணி நீக்கம்"

    • பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
    • பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன் பள்ளியில் இந்தி ஆசிரியை ஒருவர் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இந்தியில் கவிதை சொல்லுமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவனுக்கு இந்தி மொழியில் கவிதை சொல்ல தெரியவில்லை. இதைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை மாணவனை பலமுறை தாக்கியுள்ளார். அப்போது மாணவனின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கிய அவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து உள்ளார். இதற்கும் ஆசிரியை மாணவனை அடித்துள்ளார்.

    இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்தி ஆசிரியையை அழைத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியை தனது தவறை உணர்ந்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்பதற்கு தயாராக இருப்பதாகவும், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் மாணவனின் பெற்றோரோ ஆசிரியையை சந்திக்க விரும்பவில்லை என்றும், கல்வியாண்டு முடியும் வரையில் அவர் பணியில் தொடரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்தி ஆசிரியையை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தின்போது 99 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு 0 மதிப்பெண் வழங்கிய தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். #TeacherSuspended
    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் 12ம் வகுப்பிற்கான இடைநிலைத்தேர்வு நடைபெற்றது. இதில் 9.74 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 3.28 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது.

    தேர்வில் தோல்வியடைந்த 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து பெற்றோர்கள், மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாநில அரசு தேர்ச்சி அடையாத 3.28 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து தெலுங்கானாவின் 12 தேர்வு மையங்களில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதில் 5 தேர்வு மையங்கள் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்தது.

    இந்த தேர்வில் 12ம் வகுப்பைச் சேர்ந்த நவ்யா எனும் மாணவி 99 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் 0 மதிப்பெண் வழங்கியது கண்டறியப்பட்டது. உமா தேவி எனும் தனியார் பள்ளி ஆசிரியை இந்த விடைத்தாளை திருத்தியதாக தெரிய வந்துள்ளது.

    உமா தேவிக்கு இடைநிலைத் தேர்வு ஆணையம் ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது. 

    இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பான முழு விவரங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #TeacherSuspended





       
    ×