என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரவல்லி மலை"

    • ஆரவல்லி மலைத்தொடர் பூகம்பம், நில அரிப்பு, காலநிலை மாற்றங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும்.
    • இங்கு புதிய சுரங்க பணிக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், அரியானா மற்றும் டெல்லி முழுவதும் பரவியுள்ளது. 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் பரவியுள்ளது. புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.

    மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்தும், உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும் உள்ளது இந்த மலைத்தொடர்.

    இதற்கிடையே, ஆரவல்லி மலை தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் சதுர கிலோமீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசு இயற்கை வளங்களை விற்று வருகின்றன என கண்டனம் தெரிவித்தன.

    இதேபோல் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி புதிய நிலையான சுரங்கத் திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்கக் குத்தகைகளையும் வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    31 குன்றுகள் காணாமல் போன ஆரவல்லி மலைத்தொடரில் இயங்கும் சட்டவிரோத சுரங்கங்களை 48 மணி நேரத்துக்குள் மூடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Apexcourt #illegalmining #Aravallihills
    புதுடெல்லி:

    வட இந்தியாவில் டெல்லியில் தொடங்கி அரியானா, ராஜஸ்தான், குஜராத் என நாட்டின் மேற்கு பகுதிவரை ஆரவல்லி மலைத்தொடர் நீண்டு விரிகிறது. சுமார் 700 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மலைத்தொடரில் ராஜஸ்தான் பகுதியில் இருந்த 31 குன்றுகளை சுரங்க மாபியாக்கள் சுரண்டி எடுத்து விட்டதாக மத்திய அரசின் அதிகாரம் பெற்ற குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.



    ஆரவல்லி மலையை ராஜஸ்தான் அரசு சரியாக பராமரிக்கவில்லை. இங்கு அனுமதிபெறாத சுரங்கங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. அவற்றை மூடுமாறு உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆரவல்லி மலைத்தொடரில் இயங்கும் சட்டவிரோத சுரங்கங்களை 48 மணி நேரத்துக்குள் மூடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #Apexcourt #illegalmining #Aravallihills
    ×