என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை கோர்ட்"

    • பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மும்பை :

    மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் முல்லுண்டு பகுதியில் சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை மஜ்காவ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 34 வயது பெண்ணை ஒரு ஆண்டு தேவ்னாரில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் ஒழுக்ககேடாக எதையும் செய்யவில்லை என கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.பாட்டீல், "பெண்ணை ஒரு ஆண்டு காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை அதிரடியாக ரத்து செய்தார்.

    மேலும் உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

    சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே தவறு செய்தார் என்பதற்காக, அவர் மீண்டும் அதே தவறை செய்து இருப்பார் என போலீசார் பிடித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர். அவர் வேலை செய்ய உரிமை இருக்கிறது. சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல. பொது இடங்களில் பாலியல் தொழில் செய்து, அதனால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் தான் குற்றம் என கூற முடியும்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் பொது இடத்தில் பாலியல் தொழில் செய்தார் என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. இந்த சூழலில் ஏற்கனவே நடந்ததை வைத்து பெண்ணை பிடித்து காப்பகத்தில் அடைத்து வைத்து இருப்பது சரியல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய் வேண்டும். பெண்ணை அவரது விருப்பத்துக்கு மாறாக காப்பகத்தில் அடைத்து வைப்பது, அவர் நாடு முழுவதும் சென்று வரும் உரிமைக்கு தடையாக இருக்கும். சட்டப்படியும், பெண்ணின் வயதின்படியும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண்ணை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • பாம்பை பார்த்தவுடன் வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
    • கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு, வழக்கு விசாரணை பாதியில் நிறுத்தப்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டின் 27-வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோர்ட்டு வளாகத்திற்குள் 2 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை அங்கிருந்த காவல் அதிகாரி பார்த்து அனைவரையும் எச்சரித்தார்.

    பாம்பை பார்த்தவுடன் வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு, வழக்கு விசாரணை பாதியில் நிறுத்தப்பட்டது. கோர்ட்டு அறைக்குள் இருந்த கோப்புகளுக்கு இடையில் அந்த பாம்பு பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பாம்பு பிடிப்பவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வந்து தேடியபோது பாம்பை காணவில்லை. சுமார் ஒரு மணி நேரம் தேடிய பிறகும் பாம்பு பிடிபடாததால், சிறிது நேரத்திற்கு பிறகு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. சுவற்றில் இருந்த ஓட்டை வழியாக அந்த பாம்பு வெளியேறி சென்றிருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அருகில் காட்டுப் பகுதி இருப்பதால் அங்கிருந்து சில நேரம் பாம்புகள் கோர்ட்டு வளாகத்திற்குள் வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்வயது பழங்குடியினப் பெண் டாக்டரை சாதியின் பெயரால் தொடர்ந்து அவமதித்ததன் மூலம் தற்கொலைக்கு தூண்டியவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள பி.ஒய்.எல். நாயர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் பாயல் டாட்வி(26). பழங்குடியனத்தை சேர்ந்த இவரை சாதியின் பேரால் இங்கு உடன் பணியாற்றும் சில டாக்டர்கள் தொடர்ந்து அவமானகரமாக இழிவுப்படுத்தி பேசியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளனர்.

    சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எதிரே சாதியின் பெயரை குறிப்பிட்டு திட்டுவதும், மருத்துவ கோப்புகளை அவர் முகத்தின்மீது தூக்கி எறிவதுமாக இருந்த இவர்களின் இம்சைகளை எல்லாம் தாங்கிக்கொண்ட பாயல் டாட்வி,  இந்த டாக்டர்களில் 3 பேர் பெண்களாக இருந்தும் இவர்கள் தன்னை இவ்வாறு நடத்தி வருவது தொடர்பாக பலமுறை உறவினர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார். 

    இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியபோது தனது தொழில்முறையிலான எதிர்காலம் இதனால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் புகார் அளிக்க மறுத்து விட்டார்.

    ஒருகட்டத்தில் சக டாக்டர்களின் கொடுமைகளையும் இழிச்சொல்களையும் சகித்துக்கொள்ள முடியாத பாயல் டாட்வி, கடந்த 22-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உற்றார், உறவினர்களும் பழங்குடியின மக்கள் நலச்சங்கத்தினரும் வலியுறுத்தி வந்தனர். 

    இதே கோரிக்கையை மையமாக வைத்து அவர் பணியாற்றிய மருத்துவமனை வாசலில் பாயல் டாட்வியின் தாயார், கணவர் உள்ளிட்ட நெருங்கி உறவினர்களும் வன்சித் புஜன் அகாடி, பீம்சேனா உள்ளிட்ட தலித், பழங்குடியின அமைப்பினரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து 8 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், பாயல் டாட்வியின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் சிலரிடம் விசாரணை நடத்திய அக்ரிப்பாடா போலீசார், டாக்டர் பக்தி மெஹேரே என்பவரை இன்று கைது செய்தனர்.

    இவ்விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்படும் மேலும் இரு டாக்டர்களான அன்க்கிட்டா கன்டேல்வால்,  ஹேமா அஹுஜா ஆகியோர் கைது நடவடிக்கைக்கு பயந்து மும்பை கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையாவை அறிவிக்கக்கோரும் வழக்கில் அவர் மூன்று வாரங்களில் பதிலளிக்க மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VijayMallya #Mallya
    மும்பை:

    தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் பாக்கி வட்டியுடன் சேர்த்து ரூ. 9,990.07 கோடியாக இருக்கிறது. இதனை செலுத்தாமல் அவர் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடுகடத்தவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அந்நாட்டு கோர்ட்டிலும் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

    தலைமறைவு பொருளாதார குற்றவாளி என அறிவிக்கக்கோரும் வழக்கில் தான் பதிலளிக்க அவகாசம் தர வேண்டும் என விஜய் மல்லையா தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 24-ம் தேதி வரை பதிலளிக்க மல்லையாவுக்கு அவகாசம் தந்து வழக்கை ஒத்தி வைத்தார். 
    ×