என் மலர்
நீங்கள் தேடியது "நூறு நாள் வேலை திட்டம்"
- காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
- உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.
இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வார கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் இதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனவே 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு- வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். #tamilnews






