search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணத்துக்கடவு"

    • கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
    • படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மைய திறப்பு விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று மையத்தை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்று நினைப்பவர்களாக உருவாக வேண்டும். கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும்போது உதவியாக இருக்கும் என்றார்.

    தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய அளவில் 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் முன்னிலையில் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் முதன்முறையாக ஆகஸ்டு 24-ந் தேதி திரவ, திட எரிபொருள் இருண்டும் கலந்து செய்யப்பட்ட ராக்கெட் சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணுக்கு அனுப்பும் முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கிணத்துக்கடவு பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மாணவர்கள் பாடங்களை படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம். மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உலக அளவில் போட்டி உள்ளது. பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க அரசு உதவ முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
    • பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை மாநகரில் இருந்து தெற்கே

    சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது கிணத்துக்கடவு.

    இந்த ஊரின் நடுவே உள்ள பொன்மலையில் மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும்

    பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    ஞானப்பழத்திற்காக பெற்றோரான சிவ பெருமான் உமையாளுடன் கோபித்துக் கொண்டு

    பழனியில் குடிகொண்ட முத்துக்குமார சுவாமி இந்தபொன்மலையில் பாதம் பதித்ததாக இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

    எனவே இங்கு மூலவரான வேலாயுத சுவாமிக்கு பூஜை நடத்துவதற்கு முன்பாக,

    பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில்

    தனி மண்டபத்தில் உள்ள முருகப் பெருமானின் திருப்பாதங்களை தரிசித்தால்,

    விரைவில் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

    மேலும் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

    • நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.
    • தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி பகுதியில் 3 வாக்குசாவடிகளும், குருநல்லிபாளையம் ஊராட்சியில் ஒரு வாக்கு சாவடியும் என 4 வாக்கு சாவடிகள் அமைக்கப்ப ட்டிருந்தது. வாக்கு ப்பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் ஏற்கனவே செய்ய ப்பட்டிருந்தது.

    நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 6 மணிக்கே மக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடிகளுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர். தற்போது கொரோனா பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர். 3 வாக்குசாவடிகளிலும் மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து சென்றனர்.

    குருநல்லிபாளையத்தில் நடந்த ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலிலும் அந்த வார்டு மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

    ×