என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊராட்சி குழு தலைவர்"
- தியாகதுருகம் அருகே முத்துமாரி அம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
- கடந்த 3 -ந் தேதி தொடங்கி தினமும் பாரதம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 3 -ந் தேதி தொடங்கி தினமும் பாரதம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
நேற்று காலை காளி கோட்டை இடித்தல், பொங்கல் வைத்தல், அக்னி மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைக்கப்பட்டார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி, பெருமாள் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மலையரசன் எத்திராஜ் ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்