என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயிர்க்கடன் மோசடி"
- முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில் மீது பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
- வெங்கடேசை சஸ்பெண்டு செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளரிவெள்ளி தொடக்க வேளான் கூட்டுறவு கடன் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பயிர்க்கடனில் ரூ.3.50 கோடி முறைகேடு நடந்தது 6 மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சங்க செயலாளர் மோகன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில் மீது பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இந்த முறைகேடுக்கு மத்திய கூட்டுறவு வங்கியை சேர்ந்த ஆய்வாளர் வெங்கடேஷ் (வயது 40)என்பவர் உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனால் முறைகேடு நிதியில் பாதியை அவரிடம் வசூலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வெங்கடேசிடம் நடத்திய விசாரணையில் அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து வெங்கடேசை சஸ்பெண்டு செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்