search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க் ரூட்டே"

    • அக்டோபர் 1-ந்தேதி பதவி ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.
    • ஜூலை மாதம் நடைபெறும் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட இருக்கிறார்.

    அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு. மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

    இந்த 32 நாடுகளில் ஒரு நாடு மீது இந்த அமைப்பில் இல்லாத நாடு தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்தமாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும்.

    இந்த பாதுகாப்பான நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பிரதமர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது.

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான நேரத்தில் மார்க் ரூட்டே பொதுச் செயலாளர் பதவியை ஏற்க இருக்கிறார்.

    ஜூலை 9 மற்றும் 11-ந்தேதி வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டின்போது ரஷிய அதிபர் புதின் மற்றும் மற்ற நாட்டின் அதிபர்கள் அதிகாரப்பூர்வமாக அவர் வரவேற்பார்கள்.

    தற்போது பொதுச் செயலாளரான இருக்கும் நர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ந்தேதி முடிவடைகிறது. அக்டோபர் 1-ந்தேதி மார்க் ரூட்டே பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்.

    ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 10 வருடத்திற்கு மேல் இந்த பதவியில் நீடித்தார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ல் படையெடுத்தபோது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இருதரப்பு இடையேயான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
    • இந்தியா – நெதர்லாந்து உறவுகள் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன.

    இந்தியாவும் நெதர்லாந்தும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2021 ஏப்ரல் 9 நடைபெற்ற இணையவழி உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவும் பங்கேற்றனர்.

    பின்னர், தொடர்ச்சியாக இரு தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வருகின்றனர். தொடர்ச்சியான உயர்நிலை பயணங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் இந்தியா – நெதர்லாந்து உறவுகள் அண்மை ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன.

    இந்நிலையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே-யுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.இந்தியா – நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகள் இடையே வேளாண்மை, உயர்தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.

    இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தியா பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்தும் இருதலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    ×