என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "75 ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்"
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்திய தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கையேடு விநியோகம்.
சென்னையில் இந்திய கடலோரக் காவல்படையின் விமானத்தளம் சார்பில் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நாட்டின் பெருமைமிகு விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார்.
சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம், நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாணவர்களின் உள்ளங்களில் நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் விதமாக, இந்திய தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும். தேசிய கொடிகள், கொடிகளை கொண்ட பட்டைகள், கையேடுகள் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்